இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
வடகறி, திருமணம என்னும் நிக்கா படங்களையடுத்து எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில் வலியவன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் ஜெய். அந்த படத்தில் ஆண்ட்ரியா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்தபடியாக புகழ் என்றொரு படத்தில் நடிக்கிறார் ஜெய்.
சிறிய பட்ஜெட்டில் தயாராகி வரும் அப்படத்தின் படப்பிடிப்பு சென்னையிலுள்ள ஆவடி பகுதியில் 15 நாட்களாக நடைபெற்று வந்தது. அப்போது, அரசியல் கட்சி கூட்டத்துக்குள் புகுந்து அவர்களை அங்கிருந்து அடித்து துரத்தும் சண்டை காட்சியில் நடித்தார் ஜெய். அதையடுத்து, படுகவர்ச்சியாக நடித்திருக்கும் நாயகி சுரபியுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருக்கிறார்.