கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
ஒரு படம் மாபெரும் வெற்றி பெற்ற பிறகு, பொதுவாக அந்தப் படம் சம்பந்தப்பட்ட இயக்குனர் ஒரு படம்தான் இயக்குவார், முன்னணி ஹீரோவாக இருந்தால் அவரும் ஒரு படத்தில்தான் நடிப்பார். அந்தப் படத்தில் ஹீரோயின்களைப் பொறுத்தவரையில் அந்த மாபெரும் வெற்றிப் படம் அவர்களுக்கு மேலும் நான்கைந்து புதிய பட வாய்ப்புகளைப் பெற்றுத் தரும். ஆனால், 'கத்தி' படத்தின் மாபெரும் வெற்றி அப்படத்தின் ஹீரோயினான சமந்தாவுக்கு மேலும் பல புதிய வாய்ப்புகளைப் பெற்றுத் தரவில்லை என்பது ஆச்சரியமான விஷயமாக உள்ளது. சமந்தா தற்போது நடித்து வரும் 'பத்து எண்ணுறதுக்குள்ளே' படம் எப்போதோ கமிட் ஆன படம்தான். உண்மையிலேயே சமந்தாவுக்கு மேலும் புதிய பட வாய்ப்புகள் வரவில்லையா, அல்லது அவர் ஏற்றுக் கொள்ளவில்லையா என்பது புதிராக உள்ளது.
இன்றைய சூழ்நிலையில் தமிழ் சினிமாவில் அழகான, கிளாமரான, தமிழ் பேசத் தெரிந்த ஹீரோயின்களுக்கு பஞ்சமாக உள்ளது. அப்படியிருக்க மேற்சொன்ன அனைத்துத் தகுதிகளும் உள்ள சென்னைப் பெண்ணான சமந்தாவிற்கு புதிய வாய்ப்புகள் வரவில்லை என்று சொன்னால் அது நம்பும்படியாக இல்லை. ஒரு வேளை அவர் முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே நடிக்க முடிவு செய்திருக்கலாம், அல்லது பெரிய இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்திருக்கலாம். அப்படிப் பார்த்தால் அடுத்து அவர் அஜித்துடனோ அல்லது விஷால், கார்த்தி போன்றோருடனோதான் நடிக்க வேண்டும். அந்த அறிவிப்புகள் அடுத்த ஆண்டு வரலாம், வராமலும் போகலாம்.