ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
கங்கை அமரன் பாஜகவில் சேர்ந்ததை அடுத்து நடிகர் நெப்போலியனும் அக்கட்சியில் சேருகிறார். சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகராக இருந்த நெப்போலியன் பிறகு அரசியலில் தீவிரமாகி, திமுக சார்பில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். மு.க.அழகிரி உடன் நெருக்கமாக இருந்த காரணத்தால் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட நெப்போலியன், திமுகவிலிருந்து விலகி வேறு கட்சியில் சேரப்போகிறார் என்ற தகவல் அடிபட்டது. அவரை பாஜகவில் சேரும்படி அழைப்பு விடுத்தார் பாஜக தலைவர் அமித் ஷா. நெப்போலியனும் இதற்கு சம்மதித்துவிட்டார். நாளை காலை 10 மணிக்குபாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அமித் ஷாவைச் சந்தித்து கட்சியில் இணைகிறார் நெப்போலியன்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நெப்போலியன், "ஆமாம், பாஜக கட்சியில் இணையப்போவது உண்மைதான். என் ரசிகர் மன்ற நிர்வாகிகள், ஆதரவாளர்களுடன் இணையப் போகிறேன். இன்று நடக்கும் பொதுக்கூட்டத்தில்தான் சேர அழைத்தார்கள். ஆனால் எனது ரசிகர் மன்றத்தினர் பல்வேறு பகுதியிலிருந்து வந்து சேர கால அவகாசம் தேவை என்பதால் நாள் பாஜக தலைவர் அமித் ஷா முன்னிலையில் கமலாலயத்தில் இணைகிறேன்." என்று கூறி இருக்கிறார். நேற்று மாலை பாஜகவின் தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நெப்போலியன் வீட்டுக்கு வந்து அவரைச் சந்தித்து, முறைப்படி கட்சியில் சேர அழைப்பு விடுத்தனர்.
இதனிடையே திமுக., கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதிவியிலிருந்து தாம் விலகுவதாக திமுக., தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளார் நெப்போலியன். அந்தக்கடிதத்தில், இதுநாள் வரை எனக்கு ஆதரவளித்து, உயர்வளித்து அன்பு பாராட்டிய இயக்கத்தின் தலைவருக்கும், பொதுச்செயலாளர், கழகப்பொறுப்பாளர் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.