கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
மனிதனின் உயர்வான பண்புகளையும் எப்படி வாழவேண்டும் என்கிற கருத்துக்களையும் பல்வேறு புராணங்களிலிருந்து கதைகளை நாடகமாக்கி தர்மத்தின் குரல் என்ற பெயரில் நாடகமாக வௌியிட இருக்கிறார்கள். நமது சனாதன தர்மத்தின் மேன்மைகளை ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடம், ஸ்ரீ காஞ்சி மடம், ஸ்ரீ அஹோபில மடம், ஸ்ரீ மத்வ பீடாதிபதிகள், ஸ்ரீ ஆதினங்கள் மற்றும் சான்றோர்கள் வழங்க இருகிறார்கள். தர்மபூமி, மோட்சபூமி, கர்மபூமி, ஞானபூமி, என்று ஆழ்வார்களாலும், நாயன்மார்களாலும், போற்றப்படும் நமது பாரத பூமியில் தழைக்கும் சனாதன தர்மத்தை பல்வேறு வடிவங்களில் வழங்க இருக்கிறார்கள்.
முதன் முறையாக சென்னைத் தொலைக்காட்சியின் பொதிகையில் சனாதன தர்மத்தின் உட்கருத்துக்களை எளிய முறையில் பாமர மக்களுக்கு புரிகிற வகையில் வழங்க இருக்கிறோம். பொதிகை தொலைகாட்சியில் ஜனவரி 5ல் இருந்து திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7 மணிக்கு ஒளிபரப்பப்படும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போதனை கதையினை வழங்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அறிய புகைப்படங்களும் பெரியவரின் பொன்மொழிகளும் இடம் பெரும். நிகழ்ச்சியில் குரு, சிஷ்யர்களின் வேதங்களின் சாரம், உபநிடதங்களின் ஆழ்ந்த சிந்தனை, புராணங்களின் புனித கருத்துக்கள், பக்தி மார்க்கத்தின் சிறப்பு, ஞான மார்க்கத்தின் மேன்மை, நமது கலாச்சாரத்தின் ஊன்றி விட்ட நன்னெறிகள், மனிதர்களின் கடமைகள், மகான்களின் உயர்வு என்று பல குரல்கள் ஒன்று சேர்ந்து ஒலிக்க உள்ளது என்கின்றது தர்மத்தின் குரலை தயாரிக்கும் ஸ்ரீ மகாலஷ்மி டெலிபிலிம்ஸ். விட்டல் நாராயணன் இந்த தொடரை இயக்குகிறார்.