டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அரசியலுக்கு வருவது பற்றி நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக தெரிவிக்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி உள்ளனர், மேலும் இதுதொடர்பாக உண்ணாவிரதம் இருக்கவும் முடிவு செய்துள்ளனர். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக நடிகர் ரஜினிகாந்த் திகழ்ந்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசியலுக்கு வருவது போன்ற சூழலையும் உருவாக்கினார். ஆனால் அதன்பின்னர் அதுப்பற்றிய எந்தமுடிவையும் அவர் அறிவிக்கவில்லை. ஆனால் அவரது ரசிகர்கள், அவர் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்புகின்றனர். மேலும் மாநில கட்சிகள் முதல் தேசிய கட்சிகள் வரை ரஜினியை தங்களது கட்சியில் சேரும்படி அழைப்பு விடுத்து வருகின்றனர். ஆனால் ரஜினியோ, எப்பவும் போல் இந்த விஷயத்தில் மவுனம் காத்து வருகிறார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் ரசிகர்களின் ஆலோசனைக்கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன் விபரம்... ரஜினி அரசியலுக்கு வந்தால் ஊழலற்ற ஆட்சியும், நேர்மையான ஆட்சியும் நடக்கும் என பல அரசியல் தலைவர்களே கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆகவே மக்கள் நலன் கருதி, ரஜினி அவர்கள், அரசியலுக்கு வர வேண்டும். 1996-ம் ஆண்டு ரசிகர்களை அரசியலில் ஈடுபட வைத்தார்.
அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று தமிழகம் முழுக்க ரசிகர்கள் கோவில்களில் வழிபாடு செய்தனர். நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது பதவியோ, பாராட்டோ கிடையாது, அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். உங்களுக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இருக்கிறதா.? இல்லையா..? ரசிகர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் நேரடியாக தெரிவிக்க வேண்டும். உங்கள் முடிவு எதுவாக இருந்தாலும் நாங்கள் ஏற்போம். வாழ்வோ, சாவோ இனி உங்களோடு தான். மேலும் அவரை அரசியலுக்கு வர சொல்லி அறவழியில் உண்ணாவிரதம் இருக்கவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
சமீபத்தில், திருப்பூர் ரஜினி ரசிர்கள் அவரது பெயரில் இருந்த சங்கத்தை அரசியல் கட்சியாக மாற்றினர். ஆனால் இந்த விஷயம் ரஜினியின் பார்வைக்கே தெரியாதாம். அதேப்போன்று, இப்போதும் ரஜினி ரசிகர்கள் சிலர் அவருக்கு தெரியாமலே சென்னையில் இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளதாக கூறுகின்றனர்.