ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் |
'கத்தி' படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இந்தியில் ஒரு படம் இயக்க இருக்கிறார். இது ஒரு பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்படுகிற படம். இதில் சோனாக்ஷி சின்ஹா தான் நடிக்க இருப்பதாக ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் அறவித்துவிட்டார். இந்நிலையில், இந்தப்படம் தமிழில் வௌியான மௌன குரு படத்தின் ரீ-மேக்காக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
சாந்தகுமார் இயக்கத்தில், வௌிவந்த இப்படத்தில் அருள்நிதி கல்லூரி மாணவராக நடித்திருந்தார். கல்லூரி மாணவரான அருள்நிதி, சகமாணவர்களாலும், போலீஸ் உள்ளிட்ட சமூகத்தாலும், சைக்கோ என்று முத்திரை குத்தப்பட்டு மனநிலை காப்பாகத்துக்கு தள்ளப்படுவது போன்ற கதை. அருள்நிதி, இப்படத்தில் ஆக்கோரஷ இளைஞராக நடித்திருந்தார். அருள்நிதிக்கு இப்படம் நல்லதொரு பாராட்டை பெற்று தந்தது. இப்போது இந்தப்படத்தை தான் இந்தியில், முருகதாஸ் இயக்க இருக்கிறாராம். மேலும் அருள்நதிக்கான கதையை அப்படியே சோனாக்ஷிக்கு மாற்ற இருக்கிறாராம். இப்படத்தில் சோனாக்ஷி, கோபமான பெண்ணாக நடிக்க இருக்கிறாராம்.
இதுகுறித்து சோனாக்ஷி கூறுகையில், முருகதாஸ் படம் என்றாலே அந்தப்படத்தில் சிறப்பாக ஏதோ ஒன்று இருக்கும். இப்படத்தில் நான் ஆக்ஷ்ன் காட்சிகளில் எல்லாம் நடிப்பேன் என்று நினைக்கிறேன். அதற்காக நான் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.