பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
இலங்கையை சேர்ந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். சல்மான் கான் உடன் கிக் படத்தில் ஜோடி போட்டவர், அடுத்தப்படடியாக ராய் என்ற படத்தில் நடித்துள்ளார். முதன்முறையாக இப்படத்தில் இரண்டு வேடத்தில் நடிக்கிறார் ஜாக்குலின், அதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். இப்படத்தில் ஜாக்குலின் ஜோடியாக ரன்பீர் கபூர் மற்றும் அர்ஜூன் ராம்பால் ஆகியோர் நடிக்கின்றனர். விக்கி சிங் இயக்குகிறார், பூஷண் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் டிரைலர் டிசம்பர் 17ம் தேதி வௌியானது. ராய் படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கிறது. இப்படம் 2015ம் ஆண்டு வௌியாக இருக்கிறது. தான் முதன்முறையாக இரண்டு வேடத்தில் நடித்த படம் வௌியாக இருப்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் ஜாக்குலின்.
இதனிடையே, ஜாக்குலினுக்கு இலங்கையில் ஏராளமான நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் இருக்கிறார்களாம், அவர்கள் எல்லோரும் இப்படத்தின் டிரைலரை இங்கு திரையிட வேண்டும் என்று கேட்டு வருகிறார்களாம். தன்மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கும் அவர்களுக்காக ராய் படத்தின் டிரைலரை அங்கு திரையிட்டு காட்ட எண்ணினார் ஜாக்குலின். இதுதொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் பூஷணிடமும் பேசியுள்ளார், அவரும் ஓ.கே. சொல்லிவிட்டார். தயாரிப்பாளரிடமிருந்து இப்படி ஒரு பதில் வந்ததையடுத்து உற்சாகமான ஜாக்குலின், இப்போது தனது தாய்நாட்டு ரசிகர்களுக்காக ராய் டிரைலரை திரையிட்டு காட்ட வேண்டிய ஏற்பாடுகளை செய்து வருகிறார்.