துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
சீரியல்ல ஒரு மாமியார் மருமகளை அடித்து விட்டாலும் சீரியல் பார்க்கும் இவங்களுக்கிடையே பீலிங் வெளிப்படுது. அந்த அளவுக்கு சீரியல் பார்க்கிற பெண்களுக்கிடையேயும் ஒரு எபிசோடு ஓடுது. ஆக, சீரியல்களில் அழுதாலும் சரி, சிரிச்சாலும் சரி அது பெண்களை போய் ரீச்சாகுது என்பதுதான் உண்மை என்கிறார் நடிகை கரோலின.
தினமலர் இணையதளத்திற்காக அவருடன் ஒரு சந்திப்பு...
கேரியரை எந்த சேனல்ல இருந்து ஸ்டார்ட் பண்ணுனீங்க?
முதல்ல நான் ராஜ் டிவியில சாதனை பெண்களை பேட்டி எடுக்கும் உதவும் இல்லம் என்றொரு நிகழ்ச்சியில்தான் அறிமுகமானேன். அதுக்கு அப்புறம் லைவ் ஷோ பண்ண ஆரம்பிச்சேன்.ராஜ் டிவியில ஒரு வருசம் பண்ணின. அப்புறமா ஜெயா டிவியில 5 வருசமாக நீங்களும் சம்பாதிக்கலாம். ஹலோ டாக்டருன்னு பல லைவ் ஷோ பண்ணினேன். இப்பவும் ஜெயா டிவியில காம்பையரிங் பண்ணினாலும் லாஸ்ட் டூ இயர்ஸா டிவி சீரியல்கள்ல நடிக்க ஆரம்பிச்சிட்டேன்.
என்னோட பேசிக் குவாலிபிகேசன் பிஏ இங்கிலீஸ் லிட்டரேச்சர். டீச்சர் டிரைனிங். நான் பேசிக்கா டீச்சர். பார்ட்டைம் ஜாப்பா டீச்சராக ஒர்க் பண்ணியிருக்கேன். நான் டீச்சர் ஜாப்புக்கு போக டிரை பண்ணிக்கிட்டிருந்த சமயம்தான் என் ப்ரண்ட் ஒருத்தங்க ராஜ் டிவியில காம்பயரிங் பண்ண ஆள் தேவைப்படுதுன்னு சொன்னாங்க. அதுக்கு அப்புறந்தான் நான் டிவிக்கு வந்தேன். இப்ப வந்து சொநத பந்தம், அழகி என்கிற ரெண்டு சீரியல்கள்ல நடிச்சிக்கிட்டிருக்கேன்.
டி.வி சீரியல்கள் என்றாலே ஒரே அழுகையாக இருப்பதாக ஒரு டாக் இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
சொல்றவங்க சொல்வாங்க. ஆனா சீரியல் புடிக்காத பொம்பளைங்களே கிடையாது. அதைத்தான் விரும்பி பார்ப்பாங்க. உதாரணத்துக்கு சொல்லணும்னா எங்க அக்காவுக்கு மேரேஜ் ஆகி ஒரு வருசம்தான் ஆச்சு. நான் அவங்க வீட்டுக்கு ஒருநாள் போனேன். கல்யாணம் ஆகிற வரைககும் என்னை மாதிரிதான் என் அக்காவும் சீரியல் பார்க்க மாட்டாங்க.எங்க அம்மா மட்டும்தான் சீரியல பார்ப்பாங்க. ஆனா, கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் அவங்க வீட்ல மாமியாரும்-மருமகளும் தெய்வம் தந்த வீடு சீரியல பக்கத்துல பக்கத்துல சேர் போட்டு டிவி முன்னாடி உட்கார்ந்து பார்க்கிறாங்க. சீரியல்ல, இரு இரு இன்னைக்கு அவரு வரட்டும் அப்படின்னு மாமியார் ஒரு டயலாக்க மருமகளைப்பார்த்து பேசுறாங்கன்னு வச்கிக்குவோம், அவங்க மாமியார் இவங்களைப்பார்த்து ஒரு லுக் விடுறாங்க. திரும்ப இந்த அம்மாவும் பதிலுக்கு ஒரு லுக் விடுறாங்க. இப்ப டிவி சீரியல் பார்த்து ஒரு விசயம் வீட்டுககுள்ள நடக்குதுன்னா. அதை விட சந்தோசமான விசயம் என்ன இருக்க முடியும்.24 மணி நேரமும் வீட்டுக்குள்ள இருக்கிற பெண்களுக்கு மட்டும்தான் சீரியலோட வேல்யூ தெரியும்.
அதேமாதிரி கல்யாணமாகி புகுந்த வீட்டுக்கு போகும்போதுதான் எனக்கும்கூட இந்த சீரியலோட அருமை புரியும். அந்த அளவுக்கு அவங்க சீரியலைப்பார்த்து ரியாகட் பண்றாங்க. அதே மாதிரி சீரியல்ல ஒரு மாமியார மருமகள் அடித்து விட்டாலும் இவங்களுக்கிடையே பீலிங் வெளிப்படுகிறது. ஆக, சீரியலை மாதிரி சீரியல் பார்க்கிற பெண்களுக்கிடையேயும் ஒரு எபிசோடு ஓடுகிறது. ஆக, அழுதாலும் சரி, சிரிச்சாலும் சரி அது பெண்களை போய் ரீச்சாகுது என்பதுதான் உண்மை.
தொடர்ந்து இப்படியே அழுகாச்சி சீரியல்களா வந்தா போரடிச்சிடுமில்ல?
அது சரிதான். அதுக்குத்தான் இப்ப கலகலப்பு, க்ரைம்னு புது மாதிரியான சீரியல்களுக்கும் ட்ரை பண்றாங்க. காலப்போக்குல இன்னும் நிறைய புதுமாதிரியான சீரியல்கள் வரத் தொடங்கிடும்.
சில சீரியல்களில் கலாச்சார சீர்கேடு அதிகரித்து வருவது பற்றி?
ஒருத்தரோட கணவர இன்னொரு பெண் அபகரிக்கிற மாதிரி சில தவறான கதைகளும் வருகிறது. ஆனால் அதெல்லாமே சமுதாயத்தில் நடக்கிற விசயம்தானே. நாட்டுல நடக்காத விசயங்கள் எதையுமே சீரியல்கள்ல சொல்லல. மனித வாழ்க்கையோட பிரதிபலிப்புதான் சீரியல்களாகி வருகின்றன. சினிமாவுல கூட நடக்காத விசயங்கள் நிறைய இருக்கும். ஆனா சீரியல்ல எல்லாமே நடக்கிற யதார்த்தமான விசயங்கள்தான் வருது. அதனால்தான் மக்களிடம் நூறு சதவிகிதம் போய் சேருகிறது என்பதுதான் என்னோட கருத்து.
சீரியல்களில் எந்த மாதிரியான விசயங்களை தவிர்க்கலாம்?
ஒரு சீரியலில் ஒருவருககு பெண் குழந்தை பிறக்கும். அதைக்கேட்ட மாமியார் சனியன் பொறந்துட்டா என்பார். பெண் குழந்தை பிறந்ததும் இப்படி சொலவது தவறு. இதுமாதிரியான வார்த்தைகளை சென்சார் பண்ண வேண்டும். அதுமாதிரி மதுபானம் குடிப்பது போன்ற தவறான விசயங்களை தவிர்க்கலாம். அந்த வகையில இது மாதிரியான விசயங்களுக்காக சென்சார்போர்டு வைச்சாலும் தப்பில்ல.
நீங்க நடிச்சதுல இந்த மாதிரி ஏதாவது விசயங்களை தவிர்க்க சொல்லியிருக்கிறீர்களா?
சில சீரியல்களில் நடிக்கும்போது சில வார்த்தைகளை மாத்தலாம் என்று தோணும். ஆனால் நான் சொன்னதில்லை. அது டைரக்டர்கள் சம்பந்தப்பட்டது என்பதால் நான் கண்டுகொள்ளவில்லை. மேலும் நான் இதுவரை சாதாரணமான குடுமபப் பெண் வேடங்களில்தான் நடித்திருக்கிறேன். புரட்சிகரமான வேடங்களில் நடித்ததில்லை. அதுபோன்ற சூழல் வரும்போது எனது கேரக்டர்கள் விசயத்தில் இன்னும் கவனமாக இருப்பேன். மேலும் இப்ப இருக்கிற டைரக்டருங்க சொன்னா ஏத்துக்கிற மாதிரிதான் இருக்காங்க. யாருமே நீ என்ன சொல்றது நான் என்ன கேட்கிறது என்கிற மனநிலையில் இல்லை. அனைவரிடமுமே நல்ல புரிதல் உள்ளது.
கோபக்காரியாக நடிக்கும் நீங்கள் நிஜத்தில் எபபடி?
நான் எப்பவுமே ஜாலியா சிரிச்சிக்கிட்டேதான் இருப்பேன். ஆனா எந்த டைரக்டர் என்னை பீல் பண்ணினாலும் கோபமா பீல் பண்றாங்க. ஒருவேளை என்னோட முகமும், தோற்றமும் அவங்களை அப்படி பீல் பண்ண வைக்கிறதோ என்னவோ. மத்தபடி நான் யாராக இருந்தாலும் பேசி ப்ரண்டாகிவிடுவேன். ஒருத்தர்கிட்டகூட கோபமா பேசினதே கிடையாது. ஆனால் டைரக்டர்கள் கோபக்காரியாக எனக்கு கேரக்டர்கள் தருவதால, என் வாழ்க்கையில் என்னை கோபப்படுத்திய சில சமபவங்களை மைண்டில் ஏற்றிக்கொண்டு அந்த கேரக்டர்களில் நடிக்கிறேன்.
அதே மாதிரி அழுகிற காட்சின்னாலும் சில பாடல்களை கேட்டா எனக்கு பயங்கரமா அழுகை வந்திடும். முக்கியமா நாயகன் படத்துல வர்ற யாரடிச்சாரோ யாரடிச்சாரோ என்ற பாடலை கேட்டா எனக்கு குபுக்குன்னு அழுகை வந்திடும். அதே மாதிரி எனக்கு அப்பா இல்லை. அதனால் அவர எப்ப நெனச்சாலும் எனக்கு அழுகை வந்திடும். அதனால் அழுகிற காட்சின்னா எனக்கு கவலையே இல்லை. உடனே பீலிங்ஸ் பொங்கி வழியும்.
உங்கள் நடிப்புக்கு விமர்சகர்கள் யார்?
எங்க அம்மா நான் என்ன பண்ணினாலும் நல்லாயிருக்குன்னுதான் சொல்வாங்க. ஆனா என்னோட சிஸ்டர், பிரதர் ரெண்டு பேரும் மைனஸதான் நிறைய சொல்வாங்க கடைசியில போனாபோகட்டும்னு பிடித்தத சொல்வாஙக.
வாய்ப்புகள் தேடிவருகிறதா? இல்லை முயற்சி எடுக்கிறீர்களா?
நீங்கள் ஒவ்வொரு நாளும் சாப்பிடுற அரிசியிலும் உங்க பேரு கண்டிப்பா இருக்கும. அதேமாதிரி நமக்குன்னு விதிக்கப்பட்டது நமக்கு கிடைக்கும். அதனால்தான் நான் பெருசா முயற்சி எடுக்கிறதில்ல. இப்ப வரைக்கும் என்னைத்தேடி வந்த வாயப்புகளைதான் பயனபடுத்திக்கிட்டு வர்றேன். என்னதான் விழுந்தாலும் புரண்டாலும் ஒட்டுறதுதான் ஒட்டும்னு சொல்ற மாதிரி மேலும, வந்துச்சுன்னா அது எந்த மாதிரியான வாய்ப்பாக இருந்தாலும் நூறு சதவிகிதம் கவனம் செலுத்தி நடிப்பேன்.
உங்களுக்கு பிடித்தமான நடிகை யார்?
எனக்கு மனோரமா ஆச்சியைத்தான் ரொம்ப பிடிக்கும். அவங்க பண்ணாத ரோல்களே கிடையாது.எல்லாவிதமான ரோல்கள்லயும் நடிச்சிருப்பாங்க. ஹீரோக்களுடன் டூயட் பாடுவதெல்லாம் பெரிய விசயமே இலலை. எல்லாவிதமான வேடங்களிலும் நடிக்க முடியும்னா அது ஆச்சியம்மாவால மட்டும்தான் முடியும், அதுக்கு அப்புறம் கோவை சரளா. அவங்க காமெடி நடிகைன்னாலும், சதிலீலாவதி படத்தில் கமல் சாருக்கே ஜோடியாக நடித்திருப்பாஙக. அந்த அளவுக்கு பர்பாமென்ஸ் பண்ணக்கூடிய ஆர்ட்டிஸ்ட் அவங்க. அந்த மாதிரியெல்லாம் எல்லோராலும நடிக்க முடியாது. எனக்கு அவங்க ரெண்டு பேருதான் இன்ஸ்பிரேசன் என்கிறார் கரோலின்.