இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
புதுமுக இயக்குனர் ஜெயகாந்தன் இயக்கி இருக்கிற படம் விருதலாம்பட்டு. இதில் ஹேமந்த் என்பவர் ஹீரோவாக அறிமுமாகிறார், ஹீரோயினாக சான்யா ஸ்ரீவத்ஸா என்பவர் நடிக்கிறார். முதல் படத்திலேயே ஹேமந்த்குமார் துணிச்சலுடன் திருநங்கையாக நடித்திருக்கிறார்.
இதுபற்றி படத்தின் இயக்குனர் ஜெயகாந்தன் கூறியதாவது: விருத்தாசலத்தை, அந்த ஊரை சுற்றியுள்ள கிராம மக்கள் விருதலாம் என்று சுருக்கமாக சொல்வார்கள். ஹீரோவின் பெயர் பட்டு என்பதால் விருத்தாலம்பட்டு என்று பெயர் வைத்திருக்கிறோம். கிராமத்து பணக்கார வீட்டு பெண்ணை ஏழை பையன் காதாலிக்கிறான். இதனால் அவன் பணக்காரர்களால் அடித்து ரெயில் தண்டவாளத்தில் தூக்கி வீசப்படுகிறான்.
அவனை விருத்தாசலம் திருநங்கைகள் காப்பாற்றி அழைத்து வருகிறார்கள். மீண்டும் பழைய தோற்றத்தில் நடமாடினால் அவனை கொன்று விடுவார்கள் என்பதால் திருநங்கையாக மாற்றுகிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தொடர்ந்து வரும் கதை. படத்தை எடுத்து முடித்துவிட்டோம். திருநங்கையாக நடிக்க ஏற்ற முகமாக வேண்டும் என்று ஆடிசன் வைத்து ஹேமந்த்குமாரை தேர்வு செய்தோம். அவரும் துணிச்சலாக நடித்துக் கொடுத்தார். அடுத்த மாதம் ரிலீசாகிறது.