ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மெட்ராஸ் படத்தில் இடம்பெற்ற "நான் நீ நாம் வாழவே உறவே நீ நான் நாம் தோன்றினோம் உயிரே..." என்ற பாட்டை எழுதியவர் உமாதேவி. திருவண்ணாமலை அருகில் உள்ள அத்திபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர். பின் தங்கிய விவசாய குடும்பத்திலிருந்து சென்னை வந்து தமிழ் இலக்கியம் படித்து கவிதை எழுதி, விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தி இப்போது சினிமா பாடலாசிரியராகியிருக்கிறார்.
இவரது கவிதை தொகுப்பை படித்த இயக்குனர் ரஞ்சித், மெட்ராஸ் படத்தில் பாட்டு எழுத வைத்தார். அந்த பாட்டு ஹிட்டாகவே தொடர்ந்து பாடல் வாய்ப்புகள் குவிகிறது உமாதேவிக்கு. ஆனாலும் பாடலாசிரியர் தாமரை போன்று தேர்ந்தெடுத்தே பாடல்கள் எழுதுகிறார். நயன்தாரா 5 வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்கும் நைட்ஷோ படத்தில் ஒரு தாலாட்டு பாடல் எழுதியிருக்கிறார். ஜெய், சுரபி நடிக்கும் புகழ் படத்தில் டூயட் பாடல் எழுதியிருக்கிறார். நல்ல பாடல்களை தேர்வு செய்து தொடர்ந்து எழுத முடிவு செய்திருக்கிறார் உமாதேவி.