பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
லட்சுமிமேனன் இதுவரை நடித்த எல்லா படங்களிலுமே குடும்பப்பாங்காகத்தான் நடித்திருக்கிறார். அதோடு பார்ப்பதற்கும் இயல்பாக இருப்பதால், அவர் கொம்பன் படப்பிடிப்புக்காக மதுரை சென்றிருநதபோது, அங்குள்ள குடும்பப் பெண்கள் அவரை ஒரு நடிகை என்று கருதி விலகி நிற்காமல், தங்களில் ஒருவர் போல் நினைத்து நெருங்கி வந்து பழகினார்களாம். அதோடு, அங்கு முகாமிட்டு லட்சுமிமேனன் நடித்து வந்தபோது, த்னனை சந்திப்பதற்காக ஸ்பாட்டுக்கு வந்த பெண்களிடம் எந்தவித பந்தாவும இல்லாமல் நீண்டகாலம் பழகிய தோழி போன்று பேசிய லட்சுமிமேனனை, சில பெண்கள் தங்களது வீட்டிற்கு ஒரு முறையாவது வர வேண்டும் என்று அன்புத்தொல்லை செய்தார்களாம். அதனால், ஒருநாள் தனக்கு படப்பிடிப்பு இல்லாதபோது அந்த பெண்களின் வீட்டிற்கு விசிட் அடித்தாராம லட்சுமிமேனன். அப்போது ஒரு பெண் நான் சமைத்த உணவை சாப்பிட்டே ஆக வேண்டும் என்று கண்டிசனாக சொன்னதால், அவரது அன்புக்கு கட்டுப்பட்டு சாப்பிட்டாராம் லட்சுமிமேனன். அதோடு, தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு லட்சுமிமேனன் திரும்பும்போது அவருக்கு மதுரை மல்லிகைப்பூவை தலைநிறைய வைத்து கமகம மணம் வீசியபடி அனுப்பி வைத்தார்களாம் மதுரைக்கார பெண்கள்.