அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சில படங்களில் கேரக்டர் நடிகையாக நடித்துள்ள உமாராணி, ராஜூ ஒரு புதுமைப்பெண் என்ற படத்தில் லீடு ரோலில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் இன்றைக்கு ஆண்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று கடைபிடிக்கப்பட்டு வரும் சில சம்பிரதாயங்களை பெண்களும் செய்யலாம் என்பதை சொல்லும் ஒரு புரட்சிகரமான வேடத்தில் இவர் நடித்திருக்கிறார்.
குறிப்பாக, தனது அம்மா இறந்தபோது, ஒரு ஆண்தான் அவருக்கு இறுதி சடங்குகளை செய்ய வேண்டும் என்று சொல்லும்போது, என் அம்மாவுக்கு நான்தான் வாரிசு அதனால் அந்த கடமைகளை நானே செய்வேன் என்று பிடிவாதமாக சொல்லி, சுடுகாட்டுக்கு தனது உறவுக்கார பெண்களுடன் சென்று இறுதி சடங்குகளை செய்வாராம் உமாராணி.
மேலும், அங்கு தனது தலையிலும் மொட்டையடித்துக்கொள்வாராம். இந்த காட்சியில் அவர் நிஜமாலுமே மொட்டையடித்தபடி நடித்தாராம். காட்சி தத்ரூபமாக வர வேண்டும் என்பதற்காக இப்படி செய்த உமாராணி, வழக்கமான கதாநாயகிகளைப்போன்று மரத்தை சுறறி டூயட் பாடுவதை விடுத்து இந்த மாதிரி அதிரடியான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புவதாகவும் கூறுகிறார்.