பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
ஆக்ஷன் ஹீரோவானால்தான் பத்து கோடி இருபது கோடி என்று சம்பளம் வாங்க முடியும் என்பதை புரிந்து கொண்டுவிட்டார் ஆர்யா. எனவே ஆக்ஷன் சப்பெஜக்ட்டில் நடிக்க முடிவு செய்தார். அப்போது அவரை தேடி வந்த கதைதான் மீகாமன். மகிழ் திருமேனி சொன்ன இந்த ஆக்ஷன் கதையில் ஈர்க்கப்பட்ட ஆர்யா மீகாமன் படத்துக்கு அதீத ஒத்துழைப்பு கொடுத்தார். திட்டமிட்டபடி படம் முடிவடைந்து இதோ 'மீகாமன்' திரைப்படம் வருகிற 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் அன்று திரைக்கு வரவிருக்கிறது. ஏதாவது ஏரியா வாங்கி வெளியிடும் எண்ணத்தில் சமீபத்தில் இப்படத்தை பார்த்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். அவருக்கு படம் மிகவும் பிடித்துவிட்டதாம்.
'மீகாமன்' படம் பார்த்து முடித்ததும் ஹீரோ ஆர்யா, ஹீரோயின் ஹன்சிகா, இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் உதயநிதி.
ஆனால் ஏனோ ஏரியா வாங்கவில்லை. அதே சமயம் 'மீகாமன்' படம் வித்தியாசமான ஆக்ஷன் படமாக உருவாகி இருப்பதாக தன் நண்பர்கள் வட்டாரத்தில் சொல்லி இருக்கிறார் உதயநிதி. இப்படத்தில் ஆர்யா கிட்டத்தட்ட 15 வில்லன்களை சமாளிக்கிறாராம்.
ஆக்ஷன் ஹீரோன்னா சும்மாவா?