டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சென்னை 28 படத்தில் அறிமுகமாகி மளமளவென வளர்ந்தவர் ஜெய். சுப்பிரமணியபுரம், ராஜா ராணி, திருமணம் என்னும் நிக்காஹ், கோவா, வடகறி படங்களில் நடித்தார். தற்போதும் 5 படங்களில் நடித்து வருகிறார். ஜெய் குடிபோதையில் வாகனம் ஓட்டி போலீசிடம் சிக்கிய சம்பவம் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி கூறப்படுவதாவது: ஜெய், ராயப்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்து ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு ராயப்பேட்டை மேம்பாலம் வழியாக மயிலாப்பூருக்கு காரில் வந்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர். ஜெய் காரை சோதனை செய்தபோது அவர் போதையில் இருப்பதை உறுதி செய்து அதற்கான அபராதத்தை விதித்தனர். ஜெய் நடிகர் என்பதை போலீசார் அறியவில்லை. ஆனால் அங்குகூடிய பொதுமக்ககள் அவர் நடிகர் என்பதை கண்டுபிடித்து சூழ்ந்துவிட்டனர். பின்னர் அங்கிருந்து ஜெய் வேகமாக சென்று விட்டிருக்கிறார்.
இந்த செய்தியை போலீசார் மறைத்தபோதும் அந்த பகுதி பொதுமக்களின் வாயிலாக வெளிவந்திருக்கிறது. இந்த செய்தி சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.