Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்துவது என் வேலையல்ல! - சித்தார்த் பேட்டி

19 டிச, 2014 - 11:22 IST
எழுத்தின் அளவு:

தமிழ் சினிமாவில், 'சாக்லேட் பாய்' முத்திரை குத்தப்பட்டு, 'இவர், அதற்கு ஒத்து வர மாட்டார்' என, நல்ல படங்களில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர், சித்தார்த். ஆனால், 'ஜிகர்தண்டா, காவியத்தலைவன்' என, இப்போது, மாறுபட்ட வேடங்களில் நடித்து, தன்னை ஒதுக்கி வைத்தவர்களுக்கு, நடிப்பின் மூலம் பதிலடி கொடுத்து வருகிறார். சினிமா பசி பிடித்து அலையும் அந்த இளைஞருடன் பேசியபோது...




* தமிழில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க போராடுவது போல் தெரிகிறதே?


இந்தி, தெலுங்கு மொழிகளில் நடித்தாலும், இப்போது நான் தமிழ் நடிகன் தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக வேறு எந்த மொழிப் படங்களிலும் நடிக்கவில்லை. தமிழில், எனக்கு ஒரு அடையாளம் தேவைப்படுகிறது. எனக்கு பிடித்த படங்களில் நடிக்க வேண்டும், வேறு ஒரு களத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளது. 'சித்தார்த், இந்த மாதிரி தான் படம் நடிப்பான்' என்ற, 'இமேஜை' ஏற்படுத்தி விடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்.




* சினிமாவில் இதுவரை நீங்கள் கற்றுக் கொண்டது?


வாழ்க்கையில், தினமும் ஒரு விஷயத்தை கற்றுக் கொண்டு தான் இருக்கிறேன். 23 படங்களில் நடித்து முடித்தபின் தான், 'காவியத்தலைவனை' பார்த்து விட்டு, நன்றாக நடித்திருப்பதாக, மற்றவர்கள் பாராட்டுகின்றனர். சினிமாவில், ஒரு நல்ல உயரத்தை அடைவதற்காக கடுமையாக, 'ஹோம் ஒர்க்' செய்கிறேன்.


* கதைகளை தேர்வு செய்வதில் கெட்டிக்கார நடிகர் யார்?


உண்மையைத் தான் சொல்கிறேன். இந்தாண்டில், சித்தார்த் போல், வேறு யாரும் கதைகளை தேர்வு செய்யவில்லை. இந்த வாய்ப்பு, திரும்ப அமையுமா என தெரியவில்லை. இதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.


* இப்போது, நடிகர்களுக்கு படங்களில் நடிக்க மற்றவர்களின் உதவி தேவைப்படுகிறதா...?


எனக்கு அதுபோன்ற பயம் எதுவும் இல்லை. என் திறமை மீது, எனக்கு நம்பிக்கை இருக்கு. பிழைப்பு மீது மரியாதை இருக்கு. வில்லனுக்கு முக்கியத்துவம் உள்ள, 'ஜிகர்தண்டா'வில் ஏன் நடித்தாய் என, பலரும் கேட்கின்றனர். இப்போது, 20 படம் வந்தால், அதில் ஒரு படம் தான் ஓடுகிறது; அந்த ஓடுகிற படத்தில், நான் இருக்க வேண்டும் என, நினைக்கிறேன். இதில் என்ன தவறு உள்ளது. 'ஜிகர்தண்டா'வில் நான், சிம்ஹாவுக்கு உதவினேன். 'காவியத்தலைவனில்' எனக்கு, நாசரும், பிரித்வியும் உதவினர்.


* இயக்குனர்களிடம், உங்கள் கருத்தை வலியுறுத்துவது உண்டா?


இயக்குனர்கள் கூறும் கதைக்குள் ஐக்கியமாகி, அந்த கதையுடனேயே பயணிப்பேனே தவிர, என் கருத்தை திணிக்க மாட்டேன். இதுவரை எந்த இயக்குனரிடமும், என் கருத்தை திணித்தது இல்லை. ஒரு கதைக்குள், நடிகன், ஐக்கியமாகி விட்டால், பாதி வெற்றி கிடைத்து விடும்.


* படித்தவர்கள் அதிகமாக சினிமா துறைக்கு வருவது பற்றி...?


நான் கூட, எம்.பி.ஏ., முடித்து, தங்கப்பதக்கம் வாங்கியபின் தான், இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளராக வேலைக்கு சேர்ந்தேன். அப்போது, பெட்ரோலுக்கு மட்டும் தான், 2,000 ரூபாய் வாங்கினேன். ஆனால், அந்த அனுபவம் தான், இப்போது பல லட்சம் ரூபாய் சம்பாதிக்க உதவியாக உள்ளது. அப்போது நான் எடுத்த முடிவு சொதப்பியிருந்தால், சிரமம்தான். இப்போது, யார் வேண்டுமானாலும், ஒரு குறும்படம் எடுத்து, 'யூடியூப்'பில் போட்டு விடலாம். வாய்ப்பு அதிகமாகவும், எளிதாகவும் கிடைக்கிறது. இதனால் படித்தவர்கள் அதிகமாக வருகின்றனர். இது, ஆரோக்கியமான விஷயம் தான்.


* படம் இயக்கும் ஆசை உள்ளதா?


உதவி இயக்குனராக இருந்தபோது, ஏராளமான கதைகள் தயார் செய்து வைத்தேன். சின்ன வயதில் இருந்தே, கமல்ஹாசனின் ரசிகன் நான். அவர் நடிப்பு ரொம்ப பிடிக்கும். வாய்ப்பு கிடைத்தால், அவரை வைத்து ஒரு படம் இயக்குவேன்.


* சமூக நலனில் உங்கள் பங்கு?


நான், என்னைப் பற்றித் தான் அதிகமாக யோசிப்பேன். மற்றவர்களை மாற்றுவது என் வேலையில்லை. எல்லாரும், வரி செலுத்த வேண்டும் என, நினைக்கிறேன். ஆனால், பாதி பேர் வரி கட்டுவதே இல்லையே. நல்ல குடிமகனாக, சில பணிகளை செய்கிறேன். ஆனால், அதை விளம்பரப்படுத்துவதில் விருப்பம் இல்லை. அது, நாகரிகமான செயல் அல்ல என, நினைக்கிறேன். சினிமாவில், வன்முறை, செக்ஸ் இருந்தால், சுத்தமாக எனக்கு பிடிக்காது. இந்த இரண்டு விஷயமும் கூடியவரை என் படங்களில் இருக்காமல் பார்த்து கொள்கிறேன்.


இவ்வாறு சித்தார்த் கூறினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in