பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? |
சினிமாவில் வேடப்பன், ஒரு சந்திப்பில், சோக்கு சுந்தரம், தங்க பாம்பு உள்பட பல படங்களில் பாடல் எழுதியவர் ஜெயங்கொண்டான். தற்போது, வந்தா மலை, நாடக மேடை, வலை உள்பட சில படங்களில் பாடல்கள் எழுதி வளர்ந்து கொண்டிருக்கிறார்.
இவர், சென்னை கே.கே நகரில் கவிஞர் கிச்சன் என்ற பெயரில் ஒரு ஹோட்டலும் நடத்தி வருகிறார். சிறு வயதில் இருநதே கவிதை எழுதி வந்தவர், சினிமாவில் பாடல் எழுத வேண்டும் என்பதற்காக சென்னை வந்திருக்கிறார். ஆனால், தான் எதிர்பார்த்தபடி சினிமாவில் சரியான வாய்ப்புகள கிடைக்காததால், ஒரு ஹோட்டலை நடத்தியபடி தொடர்ந்து சினிமாவில் பாட்டெழுத முயற்சி எடுத்து வந்திருக்கிறார்.
இப்போது பல படங்களில் அவர் பாட்டெழுதி வரும் நிலையில், அவரது ஹோட்டலும் பெரிய அளவில் வளர்ந்து விட்டது. சினிமாவில் உள்ள பல நடிகர்கள் இவரது ஹோட்டலுக்கு சென்று அவர் சமைத்துக்கொடுக்கும் ருசியான உணவுகளை சாப்பிட்டு விட்டு மனதார அவரை பாராட்டியும் வருகிறார்கள்.