'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி என்ற மெகா தொடர்களில் நடித்தவர் இர்பான். சின்னத்திரையில் பிரபலமான அவருக்கும் சினிமாவில் நடிக்கும் ஆசை ஏற்பட பட்டாளம், எப்படி மனசுக்குள் வந்தாய், சுண்டாட்டம் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனால், படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில் இர்பான் நடிப்பில் தற்போது உருவாகியிருககும் படம்தான் பொங்கி எழு மனோகரா. இந்த படத்தில் அண்ணாமலை படத்தில் ரஜினி நடித்தது போன்று பால்காரன் வேடத்தில் நடித்திருக்கிறார் அவர். அதனால் சைக்கிளில் பால் கேன்களை வைத்துக்கொண்டு அவர் செல்வது போன்ற போட்டோக்களெல்லாம் வெளியிடப்பட்டு வருகின்றன.