மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
அனிருத், இமான் என இரண்டு இளம் இசையமைப்பாளர்களின் தொடர்ச்சியான வெற்றிப் படங்களாலும், ஹிட்டான பாடல்களாலும், அவர்களுக்கு முன்பாகவே நல்ல பெயரை வாங்கியிருந்த மற்றொரு இளம் இசையமைப்பாளரான யுவன்ஷங்கர் ராஜாவின் அலை கொஞ்சம் ஓய்ந்திருந்தது. 'மங்காத்தா' படத்திற்குப் பிறகு யுவனின் இசை எந்தப் படத்திலும் பெரிதாகப் பேசப்படவில்லை என்பதுதான் உண்மை.
ஆனாலும், 'தங்க மீன்கள்' படத்தில் இடம் பெற்ற 'ஆனந்த யாழை...' மீட்டுகிறார் பாடல் அந்தப் பாடலை எழுதிய நா.முத்துக்குமாருக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. மற்ற பாடல்கள் என்று பார்த்தால் “கழுகு, ஆதலால் காதல் செய்வீர், அஞ்சான்” ஆகிய படங்களிலிருந்து ஒரு சில பாடல்களே ஹிட்டாகின. வியாபார ரீதியாக அவர் இசையமைத்த சில படங்களும் சரியாகப் போகவில்லை என்பதும் ஒரு காரணம்.
தீபாவளிக்கு வெளிவந்த 'பூஜை' படத்தின் பாடல்களும் சுமாராகத்தான் இருந்தன. தற்போது வெளியாகியுள்ள 'வை ராஜா வை, இடம் பொருள் ஏவல்' படத்தின் பாடல்கள் யுவன் மீண்டும் ஹிட் பாதைக்குத் திரும்பி விட்டார் என்பதை உணர்த்துகின்றன. 'இடம் பொருள் ஏவல்' படத்தின் பாடல்கள் கடந்த வாரமே இணையங்களில் திருட்டுத்தனமாக வெளியானாலும், அந்த இரண்டு படத்தின் பாடல்கள் அனைத்துமே இனிமையாக உள்ளதாக ரசிகர்களிடமிருந்து பாராட்டுகள் வருகின்றன.
யுவனின் படத்தில் எப்போதுமே மெலோடி பாடல்கள் தனி ரகமாக இருக்கும். அப்படிப்பட்ட பாடல்கள் இந்தப் படத்திலும் வசீகரிக்கின்றன என்கிறார்கள் ரசிகர்கள். 'இடம் பொருள் ஏவல்' படத்தில் முதன் முறையாக வைரமுத்துவுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார் யுவன். வரும் ஆண்டு யுவனுக்கு இனிமையான ஆண்டாக அமையட்டும்....