டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரமாண்ட பட்ஜெட்டில் படம் தயாரித்து வெளியிடுவதை விட, பிரமாதமான கதைகளை தயாரித்து வெளியிட்டால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்ற தொழில் ரகசியத்தை தெரிந்து வைத்திருக்கிறார் தனுஷ். அதன்காரணமாகவே தான் தயாரிக்கும் எந்த படமாக இருந்தாலும் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறாராம் அவர்.
மேலும், தன்னிடம் கதை சொல்ல வருபவர்கள், இத்தனை கோடி பட்ஜெட்டில் ஒரு கதை வைத்திருக்கிறேன் கேட்கிறீர்களா? என்று கேட்டால், முதலில் கதையை சொல்லுங்கள். அதை எத்தனை கோடியில் தயாரிக்கலாம் என்பதை நான் சொல்கிறேன் என்கிறாராம். அதோடு, தான் நடித்த லோ பட்ஜெட் படங்களை குறிப்பிட்டு, நான் நடித்த பிரமாண்ட படங்களை விட இந்த லோ பட்ஜெட் படங்கள்தான் வெற்றி பெற்றன. காரணம், அந்த படங்களின் கதைதான். அதனால் எப்போதுமே நல்ல கதைதான் ஜெயிக்கும். அதனால் எனக்கு பட்ஜெட்டை விட கதைதான் முக்கியம் என்கிறாராம். முககியமாக, வேலையில்லா பட்டதாரி படத்தை இயக்கிய கேமராமேன் வேல்ராஜ்கூட, உங்களுக்காக ஒரு கதை வைத்திருக்கிறேன். அதுவும் செலவே இல்லாத கதை என்று சொன்னதையடுத்துதான் அவரிடம் கதையே கேட்டாராம் தனுஷ்.