'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் |
பாலிவுட்டின் டாப் நடிகர் சல்மான் கான் என்பது எல்லோருக்கும் தெரியும். வௌ்ளித்திரையில் டாப்பாக இருந்தாலும் சின்னத்திரையிலும் பங்கேற்று வருகிறார் குறிப்பாக அவர் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பிரபலம். பிக்பாஸ் இப்போது எட்டாவது சீசனாக சென்று கொண்டு இருக்கிறது. தற்போது நடந்து வரும் சீசன்-8 நிகழ்ச்சி 2015 ஜனவரி 4ம் தேதி வரை நடக்க இருந்தது. இப்போது அதை மேலும் சில வாரங்கள் அதிகரித்துள்ளன. இது மகிழ்ச்சியான விஷயம் தானே, இதில் என்ன ஷாக் என நீங்கள் கேட்கலாம்... விஷயம் அதுவல்ல, ஜன 4ம் தேதிக்கு பிறகு பிக்பாஸ்-8 நிகழ்ச்சியை சல்மான் தொகுத்து வழங்கமாட்டார். அவருக்கு பதிலாக பிரபல இயக்குநர் பராகான் முன்நின்று நடத்த இருக்கிறார். சல்மான் தனது அடுத்தடுத்த படங்களின் பிஸியால் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அவரால் நடத்த முடியவில்லை, அதனாலேயே பராகான் மாற்றப்பட்டுள்ளார்.
இப்போது சொல்லுங்கள் சல்மான் ரசிகர்களுக்கு இது ஷாக்கான நியூஸ் தானே...!