டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இயக்குனர் பாலச்சந்தர் உடல் நலக் குறைவு காரணமாக சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த செய்தியைக் கேள்விப்பட்டதும், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று அவருடைய உடல்நலம் பற்றி விசாரித்து அறிந்தனர். ஆனால், அதற்குள்ளாக சமூக வலைத்தளங்களில் பலரும் பாலச்சந்தர் மரணமடைந்தார் என எந்த விதமான உறுதிப்படுத்தல் இல்லாமல் தவறானத் தகவல்களை வதந்தியாகப் பரப்பி விட்டனர். அவற்றை உண்மை என்று நம்பி சிலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகப் பதிவுகளையும் போட ஆரம்பித்தனர்.
ட்விட்டர் சர்ச்சை புகழ் இயக்குனர் ராம்கோபால் வர்மாவும், அந்த வதந்தியை உண்மை என்று நம்பி, பாலச்சந்தருக்கு அஞ்சலி என்றும் இந்தியாவின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் என அவரைப் பற்றி புகழ்ந்து எழுதி ஒரு அஞ்சலி பதிவைப் போட்டுவிட்டார். அதன் பிறகு பலரும் அவருக்கு கண்டனங்களைத் தெரிவிக்க உடனே அந்தப் பதிவை அவர் நீக்கி விட்டார்.
தற்போது அவருடைய தவறான ட்வீட்டுக்கு மன்னிப்புக் கேட்டு ஒரு பதிவைப் போட்டிருக்கிறார். “பாலச்சந்தர் பற்றிய வதந்தியைப் பற்றி விசாரிக்காமல் அப்படி ஒரு தவறான பதிவைப் போட்டதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்,” என ஒரு மன்னிப்புப் பதிவைப் போட்டிருக்கிறார்.
இந்தியத் திரையுலகத்தில் ஒரு முக்கிய இயக்குனராகக் கருதப்படும் ராம்கோபால் வர்மா முறையாக விசாரிக்காமல் அவசரக் கோலத்தில் ஒரு ட்வீட்டை ஏன் போட வேண்டும் என பலரும் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.