தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த வருடம் தன் மூத்த மகளுக்கு திருமணம் செய்து வைத்தார் நடிகர் வடிவேலு. அந்த திருமணத்துக்கு சினிமா உலகத்தை சேர்ந்த யாரையும் அழைக்காமல் ரகசியமாக திருமணத்தை நடத்தினார். மகள் திருமணத்தைப் போலவே இப்போது தன் மகன் சுப்பிரமணிக்கும் ரகசியத்திருமணம் நடத்தி வைத்திருக்கிறார் வடிவேலு. சிவகங்கை மாவட்டம் திருபுவனம் கிராமம் பஜார் தெருவை சேர்ந்த ஏழை குடும்பத்துப் பெண்ணான புவனேஸ்வரியை தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். வடிவேலுவின் சொந்த ஊரான மதுரையிலுள்ள ராஜா முத்தையா மன்றத்தில் இத்திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்தது.
இந்த திருமணத்திற்கும் வடிவேலு தன் நண்பர்கள், சினிமாக்காரர்கள் யாரையும் அழைக்கவில்லை. வடிவேலுவின் உறவினர்கள் மட்டும் இத் திருமணத்தில் கலந்து கொண்டனர் என்ற சொல்லப்பட்டது. உண்மையில் வடிவேலு தன் சொந்தங்கள் அனைவரையும் அழைக்கவில்லையாம். குறிப்பாக மகனின் தாய் மாமன்களில் ஒருவரை மட்டும் திருமணத்துக்கு அழைத்துவிட்டு, இன்னொரு தாய்மாமனை அழைக்கவில்லையாம். தன்னை திருமணத்துக்கு அழைக்காததினால் வடிவேலுவின் வீட்டு விசேஷத்தில் ரசாபசம் ஏற்படும் சூழல் உருவானதாம். எனவே தனியார் செக்யூரிட்டிகளை பாதுகாப்புக்கு அழைத்து வந்துவிட்டாராம். திருமணம் முடிந்துவிட்டாலும் உறவினர்களிடையே புகைச்சல் நீடிக்கிறது.