இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
வெளுத்துக்கட்டு அருந்ததி, நாய்கள் ஜாக்கிரதை படம் வெற்றி பெற்றதையடுத்து, புதிய படங்கள் தன்னை முற்றுகையிடும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார். அதோடு, இந்த தருணத்தை பயன்படுத்தி அடிமட்டத்திலேயே கிடக்கும் தனது சம்பளத்தையும் தடாலடியாக உயர்த்தி விட வேண்டும் என்றும் கணக்குப்போட்டுக்கொண்டிருந்தார்.
ஆனால், இப்போது பார்த்தால் எந்த புதிய படமும் அவருக்கு கிடைக்கவில்லையாம். ஏற்கனவே பேசிக்கொண்டிருந்த ஒரு கம்பெனிதான் சான்ஸ் தருவதாக கூறியுள்ளதாம். மற்றபடி நாய்கள் ஜாக்கிரதை படத்தின் வெற்றியை முன்வைத்து புதிய படங்களுக்காக அவர் எடுத்த எந்த முயற்சிகளும் கைகொடுக்கவில்லையாம்.
அப்படி அவர் வாய்ப்பு கேட்கச்சென்ற இடங்களில், நாய்கள் ஜாக்கிரதை படத்தில் நாய்தானே நடித்தது. அந்த படம் ஓரளவு ஓடியதுகூட அந்த நாய்க்காகத்தானே என்று அந்த படத்தின் வெற்றியில் அருந்ததிக்கு துளியும் பங்கில்லை என்பது போன்று கூறுகிறார்களாம். இதனால் கடும் மூடுஅவுட்டில் இருக்கும் அருந்ததி, அடுத்தபடியாக தனது நடிப்பில் வெளியாகயிருக்கும் தொட்டால் தொடரும், சரவண பொய்கை போன்ற படங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.