தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'லிங்கா' படத்தில் சில காட்சிகள் காப்பியடிக்கப்பட்டவை என சமூக வலைத்தளங்களில் பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது, அது சம்பந்தமான செய்தியை நாமும் வெளியிட்டிருந்தோம். அதைத் தொடர்ந்து இரு தினங்களுக்கு முன் 'லிங்கா' படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளில் அந்த காப்பியடிக்கப்பட்ட காட்சிகளும் நீக்கப்பட்டிருக்கின்றன. நாம் விசாரித்தவரையில் இதுவரை படத்திலிருந்து மொத்தம் 9 நிமிட நேரத்திற்கான 6 காட்சிகளை நீக்கியுள்ளார்களாம்.
'ஹௌ டூ ஸ்டீல் எ பில்லியன்' என்ற ஹாலிவுட் படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்ட காட்சியான சாவியை காந்தத்தின் உதவியால் ரஜினி அவருடைய கைக்கு கொண்டு வரும் காட்சி,
கிளைமாக்சில் 'சிவந்த மண்' படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட பலூன் காட்சியில் சில நிமிடங்கள் குறைப்பு,
'லிங்கா' ரஜினிகாந்த் முதன் முறையாக ஊருக்கு வரும் போது அவரை மறித்து ஒரு கவிஞர் கவிதை சொல்லும் காட்சி,
சோனாக்ஷி சின்ஹா அவருடைய தோழிகளுடன் சேர்ந்து கணக்கு வாத்தியார் என நினைத்து ராஜா லிங்கேசுவரன் வரும் காரை வழி மறித்து தண்ணீரை ஊற்றும் காட்சி,
ராஜா லிங்கேசுவரன் வரைந்து வைத்திருந்த அணை வரைபடங்களின் மீது சோனாக்ஷி சின்ஹா காபியை தெரியாமல் ஊற்றிய காட்சி,
ராஜா லிங்கேசுவரன் நடத்தும் விருந்திற்கு விருந்தினர்கள் அரண்மனைக்குள் கார்களில் ஒருவர் பின் ஒருவராக வந்திறங்கும் காட்சி,
ஆகிய 6 காட்சிகளை நீக்கியுள்ளார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 9 நிமிடக் குறைப்பு மட்டும் படத்திற்குப் போதுமா அல்லது மேலும் சில காட்சிகளைக் குறைப்பார்களா என்பது இனிமேல்தான் தெரிய வரும். நாளையுடன் பல பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு முடிவுக்கு வருவதால் இந்த வாரக் கடைசியில் குடும்பத்துடன் வரும் ரசிகர்கள் அதிகரிப்பார்கள் என திரையரங்கு வட்டாரங்கள் ஆவலுடன் காத்திருக்கின்றன.