‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தமிழில், 'வால்மீகி' படத்தின் மூலம் அறிமுகமானவர் மீரா நந்தன். அதன் பிறகு அய்யனார், சூரிய நகரம் படங்களில் நடித்தார். இவர் நடித்த தமிழ் படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. அதனால் தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லை என்றாலும் மலையாளத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். தற்போது தமிழில் சரத்குமாருடன் சண்டமாருதம் படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் காற்றும் மழையும், என்னு சுவந்தம், கசின்ஸ் படங்களிலும், இரண்டு தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் துபாயில் ஒலிபரப்பாகும் ஒரு வர்த்தக வானொலியில் சிறப்பு ரேடியோ ஜாக்கியாகவும் பணியாற்றி வருகிறார். சண்டமாருதம் படத்தில் நடிக்க வரும்போது அந்த வானொலி நிர்வாகத்திடம் சிறப்பு அனுமதியும், விடுமுறையும் பெற்று வந்து பொள்ளாச்சியில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்துக் கொடுத்திருக்கிறார்.
குறுகியகால விடுமுறையில் வந்ததால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை இரவு பகலாக படமாக்கினர். கடைசியாக எடுப்பதாக இருந்த கிளைமாக்ஸ் காட்சிகளை மீரா நந்தனுக்காக முன்பே எடுத்து முடித்திருக்கிறார்கள். மீரா நந்தனுக்காக சரத்குமார் 36 மணி நேரம் தொடர்ந்து நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்ததும் தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன், ராதிகா சரத்குமார், சரத்குமார் ஆகியோர் மீரா நந்தனை பாராட்டி மலர்கொத்து கொடுத்து வழி அனுப்பி வைத்துள்ளனர்.