'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பொதுவாக நடிகர்கள்தான் சென்னையில் உள்ள கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெறுவார்கள். அல்லது நடிக்க வருவதற்கு முன்பு அங்கு பயிற்சி பெறுவார்கள், விஜய் சேதுபதி, விதார்த், விமல் ஆகியோர் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்று நடிக்க வந்தவர்கள்.
இருக்கு ஆனா இல்ல என்ற திகில் படத்தில் அறிமுகமான மனீஷாஸ்ரீயும் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றுள்ளார். ஜெய்ப்பூரை பூர்வீகமாக கொண்ட மனீஷாஸ்ரீ படித்தது, வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். மாடலிங்காக வாழ்க்கையை துவங்கியவர் 700 விளம்பர படங்களில் நடித்துள்ளார். விளம்பரபடங்களிலும், மாடலிங்கிலும் பிசியாக இருந்தவர் சினிமா வாய்ப்புகளை தவிர்த்தார்.
அறிமுகமான "இருக்கு ஆனா இல்ல" சரியாக போகாததால் மீண்டும் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று தீவிரமாக யோசித்து கூத்துப்பட்டறையில் சேர்ந்து 3 மாதம் நடிப்பு பயிற்சி பெற்றுள்ளார். தற்போது ஒவ்வொரு நண்பனும் தேவ மச்சான் படத்தில் நடித்து வருகிறார். இதில் பல கெட்அப்களில் நடிக்கிறார். முழு நடிப்பு திறமையையும் வெளிபடுத்துகிற படமாக இது இருக்கும். அதன் பிறகு சினிமா வாய்ப்பு பிரகாசமாகும் என்று மனீஷாஸ்ரீ உறுதியாக நம்புகிறார்.