‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
காதல் கோட்டைக்கு பிறகு பல வெற்றிக் கோட்டைகளை கட்டிய தேவயானி 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். அவரின் அப்பாவித்தனமான குழந்தை முகம் எல்லோருக்கும் பிடிக்கும். 2004ம் ஆண்டுதான் அவர் பிசியாக நடித்த கடைசி ஆண்டு. அதன் பிறகு அவர் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார். அங்கும் நம்பர் ஒண் நடிகையாக வலம் வந்தார். இடையில் சில படங்களில் நடித்தார். அவற்றில் சில வெளிவரவில்லை. தன் கணவர் ராஜகுமாரன் இயக்கிய திருமதி தமிழ் தான் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம்.
தற்போது தேவயானி மீண்டும் முழுமூச்சுடன் சினிமாவில் நடிக்க முடிவு செய்து விட்டார். விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் சகாப்தம் படத்தில் ரஞ்சித்தின் மனைவியாக நடிக்கிறார். சமீபத்தில் பொள்ளாச்சி பகுதியில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார். படத்தில் மிகவும் உணர்ச்சிபூர்வமான கேரக்டராம். இதற்கு பிறகு கண்ணியமான அக்கா, அண்ணி கேரக்டரில், பெண்களுக்கு முக்கியத்தும் கொடுக்கும் கேரக்டரில் தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார்.