நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ |
வினோத், இஷாரா, யாமினி நடிக்கும் பப்பரப்பம் படத்தை சசிகுமார் இயக்கி வருகிறார். இந்த படக்குழுவினர் கடந்த நவம்பர் 23ந் தேதி சென்னை கடற்கரையை சுத்தப் படுத்தும் பணியை தொடங்கினர். அதன்பிறகு நவம்பர் 30ந் தேதி இரண்டாம் கட்டமாக சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
தற்போது மூன்றாம் கட்டமாக பட்டினப்பாக்கம் பகுதியை சுத்தப்படுத்தி வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள பள்ளியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதையொட்டி பள்ளியை சுற்றியுள்ள குப்பைகளை அகற்றியதோடு. பள்ளியின் உள்ளே ஓவியம் வரைந்து வருகிறார்க்ள. லாரிகளில் மணம் கொண்டு வந்து கொட்டி பள்ளி மைதானத்தை சீரமைத்தார்கள். இந்த பணிகளில் படத்தின் நாயகி இஷாரா கலந்து கொண்டு காலை முதல் மாலை வரை வேலை செய்தார்.
"நாங்கள் எங்கள் படத்தை பிரபலப்படுத்த எடுத்துக்கொண்ட வழிமுறையென்றாலும் , இதில் கடற்கரையோரம் உள்ள மக்கள் பெரும்பாலும் விழிப்புணர்வு அடைந்திருக்கிறார்கள். தற்போது குப்பைகளை தொட்டியில் கொட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த பொதுநலம் எங்களுக்கு சந்தோசத்தை தருகிறது. ஒரே ஒரு வாரம் செய்துவிட்டு ஓரங்கட்டியிருந்தால் இந்த மாற்றத்தை உருவாக்கியிருக்கமுடியாது. இது நாங்கள் தொடர்ந்து செய்வதால் அவர்களுக்கே இந்த புள்ளைங்க வந்து சுத்தப்படுத்துது, நாம குப்பை போடாமலாவது இருப்போம் என்ற எண்ணத்திற்கு வர வைத்திருக்கிறது. எங்களால் முடிந்த அளவு தொடர்ந்து செய்ய இருக்கிறோம். எங்களோடு அடுத்த வாரம் கைகோர்க்க ஒரு கல்லூரியிலிருந்து 300 மாணவர்கள் வரவிருக்கிறார்கள்" என்கிறார் இயக்குனர் சசிகுமார்.