பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வேந்தர் டி.வி.யில் ஞாயிறு தோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் 'நினைத்தாலே இனிக்கும்' நிகழ்ச்சி, நேயர்களிடையே அருமையான வரவேற்பைப் பெற்றுள்ளது.
பிரம்மாண்டமான, அழகுமிகு அரங்கத்தில் நடிகை குஷ்பு, திரைப்படப் பிரபலங்களுடன் கலந்துரையாடுகிறார். இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் குஷ்பு தோன்றுவது இதுதான் முதல்முறை.
இன்று திரையில் பிரபலமாக இருக்கும் முன்னணி கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகள், மனந்திறந்து குஷ்புவுடன் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். மேலும், 'படம் பேசும்', 'கலாட்டா கெட்-அப்', 'வேந்தர் ஷாப்பிங்' போன்ற சுவையான பகுதிகளும் இதில் இடம்பெறுகின்றன.
'படம் பேசும்' பகுதியில், பிரபலங்களின் புகைப்படங்கள் காண்பிக்கப்படுகின்றன. அந்த புகைப்படங்களைப் பற்றிய சுவையான நினைவுகளை பிரபலங்கள் பகிர்ந்து கொள்வர். 'கலாட்டா கெட்-அப்' பகுதியில், பிரபலங்கள் தேர்வு செய்யும் தோற்றம், அவர்களுக்கு மேக்கப்பாக போடப்படும். 'வேந்தர் ஷாப்பிங்' பகுதியில், பிரபலங்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை இலவசமாக ஷாப்பிங் செய்து கொள்ளலாம்.
ஞாயிறு தோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, அன்று மாலையே 6.30 மணிக்கு மறுஒளிபரப்பாகிறது.