தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
90களில் முன்னணி நடிகையான அமலா தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவைத் திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு விலகினார். அதன் பின் அவர் நடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. தற்போதுதான் தமிழில் 'உயிர்மை' என்ற தொலைக்காட்சித் தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட தொலைக்காட்சித் தொடரில் நடிப்பதுதான் மிகவும் சௌகரியமாக இருக்கிறது, அது சினிமாவில் நடிப்பதில் இருக்காது, அதனால் சினிமாவில் நடிக்கும் எண்ணமெல்லாம் இல்லை என்ற ரீதியில் பதிலளித்திருந்தார்.
ஆனால், தற்போது ஹிந்தியில் பிரபல இயக்குனரான மகேஷ்பட் தயாரித்து வரும் 'ஹமாரி அதுரி கஹானி' என்ற படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார். இது பற்றி படத்தின் தயாரிப்பாளரான மகேஷ்பட் டிவிட்டரில் கூறியுள்ளதாவது, “எந்தக் காலத்திலும் அழகான அமலா, எங்களது காதல் காவியமான 'ஹமாரி அதுரி கஹானி' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கப் போகிறார்,” என தெரிவித்துள்ளார்.
அமலா ஹிந்திப் படம் ஒனறில் நடிப்பது ஆச்சரியமான விஷயம்தான். அவரைத் தங்களது படங்களில் நடிக்க வைக்க தெலுங்கு மற்றும் தமிழ் இயக்குனர்கள் பலர் முயற்சித்த நிலையில் அமலா ஹிந்திப் படத்தில் நடிக்க சம்மதித்திருப்பது அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி, தென்னிந்திய மொழிகளிலும் அவர் நடிப்பாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.