தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆரி நாயகனாக நடித்து நெடுஞ்சாலை படத்தில் நடித்தவர் ஷிவதா நாயர். கேரளத்து நடிகையான அவரது நடிப்பு அந்த படத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. அதனால், அடுத்தபடியாக முன்னணி ஹீரோக்களின் படங்கள் அவருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும், அப்படி எதுவும் நடக்கவில்லை.
அசோக் நாயகனாக நடிக்கும் 0 என்ற படத்தில்தான் தற்போது அவர் நடித்துக்கொண்டிருக்கிறார். முதல் படத்தில் ஷிவதா நாயரின் நடிப்பு சிறப்பாக இருந்ததால் இந்த படத்தில் அவருக்கு இனனும் வெயிட்டான கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்களாம். அதனால், தற்போதைய லேட்டஸ்ட் நடிகைகளை மிஞ்சும் அதிரடியான நடிப்பை வெளிப்படுததி வருகிறாராம் ஷிவதா நாயர்.
குறிப்பாக, சில எமோஷனலான காட்சிகளில் கதையை உள்வாங்கி நடிப்பில் பின்னி எடுக்கிறாராம் அவர். அதைப்பார்த்து நீங்களெல்லாம் கதாநாயகியை மையப்படுத்தும் கதைகளில் லீட் ரோலில் நடிக்கும் அளவுக்கு திறமையான நடிகை என்று சிலர் ஷிவதாவிடம கூறி வருகிறார்களாம். அதனால் தனது திறமை மீது தற்போது அதிக நம்பிக்கைக்கொண்டுள்ள அவர், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் அடுத்து நடிக்கும் ஆர்வத்துடன் சில டைரக்டர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.