ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மழலை கலந்த அழகு ததும்பும் முகத்துடன் கோலிவுட்டில் வலம் வரும் சரண்யா மோகன் நடிக்கும் புதிய படம், அழகர் சாமியின் குதிரை. டைரக்டர் சுசீந்திரன் இயக்கும் இப்படத்தில் சரண்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கெளதம் வாசுதேவ் மேனனின் சொந்த நிறுவனமான போட்டான் பிலிம் ஃபேக்டரி இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இளைஞானி இளையராஜா இசையமைக்கிறார் என்பது மற்றுமொரு தனிச்சிறப்பாகும். பல்வேறு கதாபாத்திரங்களில் நேர்த்தியான நடிப்பின் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்த சரண்யா, தற்போது வேலாயுதம் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து வருகிறார். இது குறித்து சரண்யாவிடம் கேட்ட போது, டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வெண்ணிலா கபடிக் குழு படத்தில் என்னை கதாநாயகியாக்கிய சுசீந்திரன் தற்போது அழகர்சாமியின் குதிரை படத்தில் என்னை தேர்வு செய்திருக்கிறார். இந்த படத்தை கெளதம் மேனன் தயாரிப்பதால் எனது சந்தோஷம் இரு மடங்காகி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஒருநாள் ஒரு கனவு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சரண்யா, தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார்.