பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
சின்னத்திரை மூலம் எல்லோருடைய மனதிலும் நீங்கா இடம் பிடித்த தீபக் வெள்ளிதிரையிலும் இவனுக்கு தண்ணீல கண்டம் படத்தின் மூலம் தனது முத்திரையை பதிக்க வருகிறார். பல தலைப்புகள் ஆலோசித்த பிறகே இந்த தலைப்பை தேர்வு செய்தோம். அது இந்த அளவுக்கு பிரபலமாகும் என்பதை நாங்கள் நினைக்கவே இல்லை.
இந்த படம் உலக வெப்பமயம் ஆவதையோ, தண்ணீர் பிரச்சனை பற்றியோ பேசவில்லை. இது குடியின் தீமைகளை பற்றி விவாதிக்கும் பிரசார படமும் அல்ல. நண்பர்கள் சந்தித்துக் கொள்ளும் ஒரு பார்ட்டி, அதன் பின்னோடியில் இருக்கும் மது கேளிக்கைகள், அதனால் வரும் விளைவுகள் ஆகியவற்றை மிகவும் ஜனரஞ்சகமாக நகைச்சுவையோடு சொல்லி இருக்கிறார் இயக்குனர் சக்தி வேல். இந்த நகைச்சுவை ஒரு போதை போல, மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும்.
நடிப்பு என்று வந்த பிறகு பெரிய வேடமோ, சின்ன வேடமோ.... சின்ன திரையோ, பெரிய திரையோ நான் அதைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. இந்த படத்தில் கூட நான் ஒரு சின்ன திரை தொகுப்பாளனாக தான் நடிக்கிறேன். அந்த பாத்திரத்துக்கு நான் பொருத்தமாக இருப்பதால் மட்டுமே நான் நாயகனாக தேர்வு செய்யபட்டு உள்ளேன். சின்ன திரையில் இருந்து பெரிய திரைக்கு வரும் நடிகர்களுக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும். முக்கிய காரணம், நாங்கள் அவர்கள் வீட்டு பிள்ளையாக கருதப்படுவதுதான். இந்த வரவேற்ப்பு படத்தின் வெற்றிக்கு கட்டியமாக இருக்கும்.