டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
திருடன் போலீஸ்' படத்தின் வெற்றியை தொடர்ந்து எஸ்.பி.பி.சரண் தனது 'கேப்பிட்டல் ஃபிலிம் வொர்க்ஸ்' நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படத்திற்கு 'மூணே மூணு வார்த்தை' என்று பெயர் சூட்டியுள்ளார். இந்தப் படத்தை மதுமிதா இயக்குகிறார். இவர் 'வல்லமை தாராயோ', 'கொல கொலயா முந்திரிக்கா' ஆகிய படங்களை இயக்கியவர். இவ்விரு படங்களும் சுமாராகப் போனதால் மதுமிதாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பு கிடைக்கவில்லை. சுட்டகதை படத்தை எடுத்த லிப்ரா புரடக்ஷன்ஸ் என்ற படநிறுவனம் மதுமிதாவுக்கு ஒரு படவாய்ப்பை வழங்கியது. சுட்டகதை ப்ளாப்பானதால் படத்துறையைவிட்டே லிப்ரா பிலிம்ஸ் காணாமல்போய்விட்டது.
இந்நிலையில்தான் 'மூணே மூணு வார்த்தை' படத்தை இயக்கும் வாய்ப்பு மதுமிதாவுக்குக் கிடைத்திருக்கிறது. இதுவரை எஸ்.பி.பி.சரண் தயாரித்த அத்தனை படங்களையும் புதுமுக இயக்குனர்களே இயக்கியிருந்தார்கள். ஆனால் இப்படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்கெனவே இரண்டு படங்களை இயக்கிய மதுமிதாவிடம் வழங்கியுள்ளார் எஸ்.பி.பி.சரண். அதே சமயம், வழக்கமாக தனது ஒவ்வொரு படங்களிலும் புதிய கலைஞர்களை அறிமுகப்படுத்தும் எஸ்.பி.பி.சரண் இப்படத்திலும் 5 முக்கியமான டெக்னீஷியன்களை அறிமுகப்படுத்த இருக்கிறாராம். அவர்கள் யார் என்பதையும், படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பதையும் விரைவில் ஒரு விழாவை நடத்தி அறிவிக்க திட்டமிட்டுள்ளாராம் எஸ்.பி.பி.சரண். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்து விட்டதாம்! சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தினால் படமே முடிந்துவிடுமாம்.