டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த இயக்குநர் கே.பாலசந்தர், தற்போது நலமாக உள்ளார். நீர்க்குமிழி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலசந்தர். தொடர்ந்து நாகேஷை வைத்து பல்வேறு வெற்றி படங்களை இயக்கினார். நாகேஷ் தவிர்த்து ரஜினி, கமல் ஆகியோரையும் வைத்து நிறைய படங்களை கொடுத்தார். வித்தியாசமான படங்களை இயக்கி, தமிழ் சினிமாவின் இயக்குநர் சிகரமாக திகழ்ந்தார். இயக்குநராக மட்டுமல்லாது கவிதாலயா எனும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்களும் தயாரித்தார். வௌ்ளித்திரை தவிர்த்து சின்னத்திரையிலும் நிறைய சிரீயல்களை எடுத்துள்ளார். இன்றைக்கு தமிழ்சினிமாவில் இருக்கும் பல பிரபலங்களை அறிமுகம் செய்த பெருமை இவருக்கு உண்டு
தற்போது 84வயதாகும் பாலசந்தருக்கு இன்று(டிச.,15ம் தேதி) திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து காவேரி மருத்துவமனையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, வயது முதிர்வு மற்றும் காய்ச்சல் காரணமாக கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்த கே.பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது , தற்போது அவர் நலமுடன் இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பாலசந்தரின் மருமகன் கந்தசாமி கூறுகையில், காலையில் அவரது உடல்நிலை மோசமாக இருந்தது, ஆனால் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார் என்று கூறியுள்ளார்.
ரஜினி நலம் விசாரிப்பு
தன்னை அறிமுகப்படுத்திய தனது குருநாதர் பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்தவுடன் உடன் மருத்துவமனைக்கு விரைந்தார் நடிகர் ரஜினிகாந்த். அங்கு ஐசியூ.வில் இருந்த பாலசந்தரை பார்த்துவிட்டு அவரது உடல்நிலை பற்றி மருத்துவர்களிடமும், உறவினர்களிடமும் நலம் விசாரித்தார். ரஜினியை போன்று இயக்குநர் சமுத்திரகனி, நடிகை குஷ்பு உள்ளிட்ட ஏராளமான திரைநட்சத்திரங்களும் மருத்துவமனை சென்றுள்ளனர்.