கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
திருநெல்வேலியில் ஜாதிமோதல், வெட்டுக்குத்து நடந்து வரும் சூழலில் நடிகர் விஜய், பேசிய வெட்டுக்குத்து பேச்சு ரசிகர்களை தூண்டிவிடுவதாக இருந்தது. நெல்லையில் கத்தி படத்தின் 50வது நாள் விழா நேற்று நடந்தது. இதில் நடிகர் விஜய் பங்கேற்றார்.
அவர் பேசியதாவது: திருநெல்வேலிக்கு வந்திருக்கிறேன்.. திரு என்றால் மரியாதை, நெல் என்றால் உணவு, வேலி என்றால் பாதுகாப்பு, இவற்றை தவிர நான்காவது ஒன்று உள்ளது. அது யார் கொடுத்தாலும் வாங்கினாலும் இனிக்கும் அல்வா.. நெல்லை..நெல்லையப்பராக சாமியாக கொண்டாடும் ஊர் இது. விவசாயத்திற்கு பெயர் பெற்ற இந்த மாவட்டத்தில் கத்தி படத்தின் 50வது நாள் விழாவில் பங்கேற்பது பெருமைப்படுகிறேன். வெற்றியும் தோல்விக்கு சிறிய வித்தியாசம்தான். கடமையை செய்தால் வெற்றி, கடமைக்கு செய்தால் தோல்வி. இயக்குநர் முருகதாஸ், அவரது கடமையை சரியாக செய்தார். நானும் ஒரு நடிகனாக எனது கடமையை சரியாக செய்ததாக நினைக்கிறேன்.
இந்த படத்தின் வெற்றி ஒரு கால்பந்து விளையாட்டை போல, பத்து பேரின் பங்களிப்பு தேவைப்படுகிறது. இருப்பினும்கோல் போட்டதற்காக நான்தான் அதற்கு காரணம் என கூறமுடியாது. பத்து பேர் சேர்ந்து கோல் போட முயற்சித்தால், 11 பேர் அதனை தடுக்கவும் முயற்சிப்பார்கள். எதிர்ப்பை தாண்டிதான் வரவேண்டும். அதுதான் வாழ்க்கை. தட்டிப்பறிப்பவன் வாழ்ந்ததில்லை..விட்டுக்கொடுத்தவன் வீழ்ந்ததில்லை என கூறுவார்கள். தட்டியும் பறிக்காதீர்கள்..விட்டும்கொடுக்காதீர்கள்..நாம் நம் கையில் என்ன ஆயுதத்தை எடுக்கப்போகிறோம் என்பதை எதிரிதான் தீர்மானிக்கிறார்கள்.
நம்மை வெட்ட வரும் எதிரியிடம் நாம் வெள்ளைக்கொடியை காட்டிக்கொண்டு நிற்க முடியாது..எதிரி ஷாப்ட்டா பேசினால் நாமும் ஷாப்டா பேசணும்..வேற மாதிரி பேசினால் நாமும் வேற மாதிரி பேசணும்..உலகத்தில் நல்லவன் கடைசிலதான் வெற்றிபெறுகிறான் என்ற குறை உள்ளது. கெட்டவன் வாழ்ந்துட்டு போயிறான் என்ற பேச்சு உள்ளது. நல்லவன் எப்படியெல்லாம் வாழவேண்டும் என்ற அனுபவத்தை தருகிறான். கெட்டவன் எப்படி வாழக்கூடாது என்ற அவமானத்தை தருகிறான். நாமும் உலகத்திற்கு அவமானத்தை தரக்கூடாது.
எனது ரசிகன், வெறும் ரசிகனாகமட்டும் இல்லாமல் வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும். குடும்பத்தை கவனிக்காமல், எனது படத்தை மட்டும் ரசிக்கிற ரசிகன் எனக்கு தேவையில்லை. மனைவி கடவுள் தந்த வரம்..தாய் கடவுளுக்கு நிகரான வரம்..நண்பன் கடவுளுக்குகூட கிடைக்காத வரம்..இவை எல்லாவற்றிற்கும் மேலான ரசிகர்கள்தான் எனக்கு முக்கியம். உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு முதலாளி இருப்பதைப்போல, எனக்கு காசு கொடுத்து படம் பார்க்கிற ஒவ்வொரு ரசிகனும் முதலாளிதான் இவ்வாறு விஜய் பேசினார்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களில் 60க்கும் மேற்பட்டோர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு சூழலில் அவரது பேச்சு ரசிகர்களை தூண்டிவிடுவதாக இருந்நதாக ரசிகர்களே தெரிவித்தனர். நிகழ்ச்சியில் ஒரு விவசாயிக்கு மருந்தடிக்கும் இயந்திரம் வழங்கினார். அவருக்கு ரசிகர்கள் வாள் பரிசளித்தனர். நிகழ்ச்சியில் காமெடி நடிகர் சதீஷ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகர்கள் அங்குமிங்கும் ஓடி பரபரப்பை ஏற்படுத்தினர். சேர்களை எடுத்து அடித்ததில் சிலர் காயமுற்றனர். போலீசாரும் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தினர்.