ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
முன்பை விட இப்போது கதை திருட்டு வழக்குகள் அதிகம் போடப்படுகிறது. இதனால் பெரிய படங்களே கடைசி நேரத்தில் திணறுகிறது. கடைசியாக ரஜினி நடித்த லிங்கா படத்தின் மீது நான்கு வழக்குகள் போடப்பட்டன. வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் 3 கோடி ரூபாய் பிணயத்தொகை கட்டித்தான் படத்தை ரிலீஸ் செய்தார்கள். இந்த கதை திருட்டு வழக்கு திரையுலகிற்கு பெரும் பிரச்னையாக உருவெடுத்து உள்ளது. இதனை தடுக்க திரையுலகின் அனைத்து பிரிவினரையும் திரட்டி போராடப்போவாதாக சரத்குமார் அறிவித்தார்.
சரத்குமாரும், அவரது மனைவி ராதிகா சரத்குமாரும், மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபனுடன் இணைந்து, ''சண்டமாருதம்'' என்ற படத்தை தயாரிக்கிறார்கள். இதில் சரத்குமார் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஓவியா, மீரா நந்தன் நடிக்கிறார்கள். ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்திருக்கிறார். இதன் இசை வெளியீட்டு விழாவும் இவர்கள் இணைந்து தயாரிக்கிற தனுஷ் நடிக்கும் மாரி, விக்ரம் பிரபு நடிக்கும், ''இது என்ன மாயம்'', பாபி சிம்ஹா நடிக்கும் ''பாம்பு சட்டை'' ஆகிய படங்களின் அறிவிப்பு நிகழ்ச்சியும் நடந்தது.
இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சங்க செயலாளர் ராதாரவி கதை திருட்டு வழக்கு போடுகிறவர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டித் தீர்த்தார்.
இதற்கு பதிலளித்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் பேசியதாவது: கதை திருட்டு வழக்கு அதிகரித்து விட்டது. அதைபற்றி ஆதங்கப்பட்டு ராதாரவி பேசினார். அவர் கூறிய அத்தனையும் உண்மை. இதற்கு முன் இதுபோன்ற பிரச்னைகள் பல நடிகர் சங்கத்திற்கு வந்திருக்கிறது. நாங்கள் தீர்த்து வைத்திருக்கிறோம். இப்போது அதிகரித்து விட்டது. அதை தடுத்த நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. நடிகர் சங்கத்தில் இதற்கென ஒரு தீர்மானம் நிறைவேற்றி இந்த பிரச்னைக்கு தீர்வு காண்போம். தேவைப்பட்டடால் திரையுலலகின் அனைத்து பிரிவினரும் இணைந்து போராடுவோம். இவ்வாறு சரத்குமார் பேசினார்.