ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அமரர் கல்கி எழுதிய மகத்தான காவியம் பொன்னியின் செல்வன். 3 வருட காலம் வாசகர்களை கட்டிப்போட்ட தொடர். 2500 பக்கங்களில் தமிழ் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், மன்னர்களின் வாழ்க்கையையும் பதிவு செய்த நாவல். ராஜராஜ சோழனின் வீரத்தையும், தியாகத்தையும் சொன்ன நாவல்.
இதனை அந்தக் காலத்தில் பொன்னியின் செல்வன் நாவலின் பரம ரசிகராக இருந்த எம்.ஜி.ஆர் இதனை திரைப்படமாக எடுக்க விரும்பினார். இதற்காக ஒரு கதை இலாகாவை உருவாக்கி நாவலை திரைவடிவமாக்கும் முயற்சியில் இறங்கினார். பின்னர் அந்த திட்டத்தை கைவிட்டார். நீண்ட காலத்திற்கு பிறகு கமலஹாசன் அந்த திட்டத்தை கையில் எடுத்து பார்த்து தற்போதுள்ள சூழ்நிலையில் அதன் பட்ஜெட்டை கணக்கிட்டு அவரும் கைவிட்டார். சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் மணிரத்னம் இதை முயற்சி செய்தார். அவராலும் முடியவில்லை.
இப்படி பலராலும் முயற்சித்து பார்த்து கைவிடப்பட்ட பொன்னியின் செல்வனை இப்போது வளமான தமிழகம் என்ற திரைப்படம் சாராத ஒரு அமைப்பு பைவ் எலிமெண்ட்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து 2டி அனிமேஷன் படமாக தயாரிக்க முன்வந்திருக்கிறது. மற்றவர்கள் கைவிட்ட ஒரு மாபெரும் திட்டத்தை இவர்கள் கையில் எடுத்திருப்பதை பாராட்டத்தான் வேண்டும்.
ஆனால் 3டி டிஜிட்டல் அனிமேஷன் வந்துவிட்ட காலத்தில் 2டி அனிமேஷனை மக்கள் எந்த அளவுக்கு எதிர்கொள்வார்கள் என்பது தெரியவில்லை. அடுத்து பொன்னியின் செல்வனின் பிரமாண்டத்தை ஓவியமாக்கி அதனை 2டி அனிமேஷனுக்கு கொண்டு வர அதனை திரைப்படமாக எடுக்க ஆகும் செலவை விட பல மடங்கு அதிக செலவு பிடிக்கும் என்று திரைப்பட தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறுகிறார்கள். திரைப்படம் சாராத ஒரு சமூக சேவை அமைப்பால் அத்தனை கோடியை செலவு செய்ய முடியுமா என்று தெரியவில்லை.
பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள் அதன் கம்பீரத்திற்கு பெயர் பெற்றவை. ஆளுமைக்கு பெயர் பெற்றவதை. அதனை அனிமேஷனில் கற்பனையாக வரைந்து கொண்டு வரமுடியுமா என்பதும் தெரியவில்லை. உணர்ச்சிபூர்மான ஒரு கதை அனிமேஷனாகும்போது காமெடியாகிவிடும் ஆபத்து நிறையவே இருக்கிறது அது தவிர்க்கப்படுமா?
படத்தின் தயாரிப்பு காலம் 2 ஆண்டுகள் என்கிறார்கள். அதற்குள் அடுத்த தொழில்நுட்பம் வந்து விடும். இந்தியாவில் தயாரான 2டி அனிமேஷன் படங்கள் பெரிய அளவில் வரவேற்றை பெறவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த சந்தேகத்தையெல்லாம் தாண்டி பொன்னியின் செல்வன் 2டி அனிமேஷனில் தயாராகி. அதனை மக்களும் ஏற்றுக்கொண்டு ரசித்தால் தமிழ் சினிமாவில் அதனை உருவாக்கியவர்கள் உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்கப்படுவார்கள் என்பது உறுதி.