டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'லிங்கா' படம் வெளிவந்து நான்கு நாட்கள் ஆகிவிட்ட நிலையில் படமும் நன்றாகவே விமர்சிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது படம் பார்த்த மற்றவர்களும் ரஜினியின் ஸ்டைலான நடிப்பும், அவருக்கேயுரிய ஸ்பெஷலான காட்சிகளும் படத்தில் இல்லை என்றே குறை சொல்கிறார்கள். ரஜினி ரசிகர்கள் பொதுவில் பேசும் போது படம் நன்றாக இருக்கிறது என்று சொன்னாலும், அவர்களும் 'லிங்கா' படத்தில் திருப்தியடையவில்லை. 'சிவாஜி' படத்திலும், 'எந்திரன்' படத்திலும் ரஜினிக்கே உரிய சில தனிப்பட்ட காட்சிகள் ரசிகர்களை வெகுவாக உற்சாகப்படுத்தின. ஆனால் இந்தப் படத்தில் அப்படிப்பட்ட காட்சிகள் எதுவுமில்லை. 'சந்திரமுகி'யின் ஒரு 'லகலகலக...'வே இன்று வரை பேசப்பட்டு வருகிறது.
இதனிடையே சில ரஜினியின் அதி தீவிர ரசிகர்கள் ரஜினியை விமர்சிக்கவே கூடாது, அவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் காமெடி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்படும் ஒரு படம் இந்த ஆண்டில் இதுவரை வெளியான படங்களிலேயே அதிக செலவு, அதிக வியாபாரம் என பேசப்பட்டுள்ள ஒரு படம். சென்னையைத் தவிர மற்ற இடங்களில் குறைந்த பட்சம் 200 ரூபாய் முதல் அதிக பட்சமாக 1000 ரூபாய் வரை டிக்கட் முதல் மூன்று நாட்களுக்கு விற்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வளவு ரூபாய் கொடுத்து படம் பார்க்கும் ரசிகர்களை, ரஜினிகாந்தும், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் திருப்திப்படுத்தவில்லை என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாகவும், விமர்சனமாகவும் இருக்கிறது.
இன்னமும் படத்திற்குப் படம் தன்னுடைய பக்கத்தில் இருக்கும் நடிகர்களை இவரைப் பற்றி அரசியல் பேச வைப்பதும், ஊருக்காக தனது சொத்துக்களை எழுதி வைப்பதை 'முத்து' காலத்திலிருந்தே செய்வதைப் போலவும் ரஜினிகாந்த் தொடர்ந்து செய்து வந்தால் அவருடைய ரசிகர்களே அதை நம்புவார்களா என்ற கேள்வியும் எழுகிறது. போதாததற்கு படம் வெளியாவதற்கு முன் அவர் அரசியலில் இறங்கும் எண்ணம் இல்லை என்று சொன்னாலும், அதற்கு முன் நடந்த விழாவில் அவரைப் பற்றி மற்றவர்கள் அரசியல் பேசியதெல்லாமும் ரஜினிகாந்த் மீதான பிம்பத்தை மாற்றி வருகிறது என்று சில சினிமா பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.