துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
தமிழ் சினிமாவில் ரஜினி இருக்கும் வரை, தமிழ் சினிமா, உலகளவில் பேசப்படும் என்பது உண்மை. 65 வயதிலும் 25 வயது உற்சாகம், ஒவ்வொரு ஃபிரேமிலும், அவரது ஸ்டைல், ரசிகர்களின் ஆரவாரமாய் தியேட்டர்களில் ஒலிக்கிறது.
லிங்கா படம் உருவாக்கம் மற்றும் அதுதொடர்பான பணிகளில், பல சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதுகுறித்து இனி விரிவாக பார்ப்போம்...
19 நாளில் கட்டி முடிக்கப்பட்ட அணை
ஒரிஜினல் அணையின் மாதிரியை கொண்டு, அணையின் மினியேச்சரை உருவாக்கி 300 அடி நீளம், 50 அடி உயரம் கொண்ட அணையின் செட்டை, கலைஞர்கள் 19 நாட்களில் உருவாக்கியுள்ளனர். அணை செட் அமைக்கும் போதே, சூட்டிங் அவ்விடத்தில் நடத்தப்பட்டது . பைபர் பிளாஸ்டிக், இரும்பு பைப்களை கொண்டு அணை செட் உருவாக்கப்பட்டுள்ளது.
கொட்டும் மழையிலும் விடாது நடந்த கோயில் செட்
மைசூருவை அடுத்த ஷிமோகா பகுதியில், கோயிலின் செட் அமைக்கப்பட்டது. இந்த நேரத்தில், மழையும் பிடித்துக்கொள்ளவே, கோயில் செட் அளவிற்கு, பிளாஸ்டிக் ஷீட் அமைக்கப்பட்டு, அதனுள்ளாக, கோயில் செட் அமைக்கும் பணி நடைபெற்றது.
அருமையான இடத்தில் ரயில்வே ஸ்டேசன்
படத்தில் இடம்பெற்றிருந்த சோலையூர் ரயில்வே ஸ்டேசன், ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியின் பின்புற பகுதியில், சிறு சிறு மலைகளும், ஆலமரங்களும் இருந்த அழகிய பின்னணி கொண்ட சூழலில், ரயில்வே ஸ்டேசன் உருவாக்கப்பட்டது. இந்த ரயில்வே டிராக்கில், ரயிலில் நடக்கும் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. சூட்டிங்கின் போது, ரயிலின் உட்பகுதி சேதமடைந்தால், மீண்டும் புதிய ரயில் செட் உருவாக்கப்பட்டது.
கலைத்துறையினரும் நடித்த பாடல்
ஷிமோகாவில், 10 நாட்கள் கால அளவில் ஒரு பாடலை படமாக்கினர். இந்த பாடலுக்காக உருவாக்கப்பட்ட செட்டை, 25 கலை இயக்குனர்களும், 1000க்கும் மேற்பட்ட உதவியாளர்களும் இணைந்து உருவாக்கியுள்ளனர். இந்த கலைஞர்கள், அப்பாடலிலும் சிறிது தலைகாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முழு நேரமும் செட்டில் இருந்த இயக்குனர்
150 நாட்களில் படமாக்க திட்டமி்ட்டிருந்த லிங்கா படத்தை, இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார், 120 நாட்களில் முழு படப்பிடிப்பையும் முடித்துள்ளார். இதற்காக, இவர் படப்பிடிப்பு நடந்த முழுநேரமும், இயக்குனர் செட்டில் இருந்துகொண்டே இருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்களை, ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலும், நாகார்ஜூனாவின் அன்னபூர்ணா ஸ்டூடியோவிலும் எடுத்துள்ளனர்.
ஒரு பாடலில், ரஜினி துப்பாக்கி எடுத்து சுடும் போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்தது. துப்பாக்கி, ரஜினியின் கைகளுக்கு சரியாக பொருந்தாத நிலையிலும், வேறொரு துப்பாக்கியை கேட்காமல், அந்த துப்பாக்கியையே பயன்படுத்தி, இரண்டாவது டேக்கிலேயே, ரஜினி நடித்து முடித்தார்.
நாகார்ஜூனாவின் அன்னபூர்ணா ஸ்டூடியோவில், மோனா மோனகஜோர் பாடல் படமாக்கப்பட்டது. 1980-85ம் ஆண்டுகளில், ரஜினிக்கு இருந்த எனர்ஜி, உற்சாகம், இந்த படத்திலும் இருந்தது. சந்தானம் உள்ளிட்ட சக நடிகர்களும், படப்பிடிப்பிற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்.
ரஜினி - அனுஷ்கா கயிற்றில் தொங்குவது போல எடுக்கப்பட்ட காட்சியில், அனுஷ்கா, டூப் போடாமல் நடித்துள்ளார். அனுஷ்கா, ருத்ரமாதேவி உள்ளிட்ட படங்களுக்காக, கத்தி சண்டை பயிற்சி பெற்றிருக்கிறார்.
மைசூரு பேலஸில் சூட்டிங் நடத்த அனுமதி பெற்றிருந்த போதிலும், அதன் உட்புறத்தில் சூட்டிங் நடத்த அனுமதி தரப்படவில்லை. எனவே, பேலசின் முகப்புறம் போன்ற செட் அமைத்து, அதில் டின்னர், பார்ட்டி உள்ளிட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.
கதை ஆசிரியர் பொன். குமரன், லிங்கா படத்திற்கான கதையை, 2008ம் ஆண்டிலேயே எழுதிவிட்டார். இந்த கதை, அவருக்கு உற்ற நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்தது. 2010ம் ஆண்டுவாக்கில், இந்த கதையை, பொன்.குமரன், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் கூறினார். ரவிக்குமாரும், கதையில் சில கமர்ஷியல் மாற்றங்களை செய்தார். இந்த கதையை ரஜினியிடம் தான் கூற உள்ளேன் என்பதை, ரஜினியிடம் கூறுவதற்கு முதல்நாள் தான், ரவிக்குமார், பொன்.குமரனிடம் கூறினாராம்.
சமூக உணர்வு, சிந்தனை உள்ளிட்ட அம்சங்களை கொண்டதாகவும், அதேநேரத்தில், ரஜினி படத்திற்கு ஏற்ற கமர்ஷியல் காட்சிகளுடன், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், பொன்.குமரனின் கதையை மாற்றியமைத்திருந்தார்.
படப்பிடிப்பு துவங்கியதிலிருந்து, முடியும்வரை , இயக்குனருடன், செட்டிலேயே பொன். குமரன் இருந்துள்ளார்.
படப்பிடிப்பினிடையே, கே.எஸ்.ரவிக்குமாருக்கு தீவிர முதுகுவலி ஏற்பட்டது. இதனையடுத்து, அவருக்கு ஆபரசேன் செய்யப்பட்டது. ஆபரேசன் செய்த மறுநாளே, ரவிக்குமார், சூட்டிங்கிற்கு வந்தார்.
படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களில், 4 பாடல்களை வைரமுத்துவும், ஒரு பாடலை, வைரமுத்துவின் மகன் மதன்கார்க்கியும் எழுதியுள்ளனர். படத்தில் இடம்பெறும் பாடல்களில், சமூக உணர்வு, நாட்டுப்பற்று உள்ளிட்ட அம்சங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று கருதிய இயக்குனர், ஒரு பாடலை, அதிரடியாகவும, ஸ்டைலிஷ் ஆகவும், இசைத்துள்ளலாகவும் இருக்க வேண்டுமென்று விரும்பினார். அந்த சமயத்தில், வைரமுத்து, வெளிநாடு சென்றுவிட்டிருந்த நிலையில், மோனா பாடலை, அவரது மகன் மதன் கார்க்கி எழுதியிருந்தார்.
மோனா பாடலை, ஒரே நாளில் மதன் கார்க்கி எழுதி முடித்ததோடு மட்டுமல்லாது, பாடகர் மனோ, இந்த பாடலை, ஒன்றரை மணிநேரத்தில் பாடி முடித்தார்.
இந்த பாடலில், இடம்பெற்றுள்ள "கடல் வெடிக்குது பட்டாசாய்" வரி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு பிடித்த வரி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்காக, 25 நாட்கள் கால்ஷீ்ட் கொடுத்திருந்த சந்தானம், படப்பிடிப்பிற்கு முழு ஒத்துழைப்பு அளித்திருந்தார்.
பாராசூட் மாதிரி போன்ற பலூனில் எடுக்கப்பட்ட சண்டை, சாகர் பகுதியில், அமெரிக்க கலைஞர் லீவ் டேக்கர் என்ற கலைஞரால் உருவாக்கப்பட்டது.
பெங்களூருவிலிருந்து 600கி.மீ தொலைவில் உள்ள லிங்கமுகி அணைப்பகுதியில், இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. 1976ம் ஆண்டுவாக்கிலேயே, இந்த அணைப்பகுதியில் சூட்டிங் நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதற்குப்பிறகு, தற்போது தான் லிங்கா படத்திற்காக, அப்பகுதியில் சூட்டிங் நடத்த சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
லிங்கா படத்தின் இயக்கத்திற்காக கே.எஸ்.ரவிக்குமாருக்கு, 10க்கும் மேற்பட்ட உதவி இயக்குனர்கள் பணிபுரிந்துள்ளனர்.