ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இடம் பொருள் ஏவல் படத்தை சீனு ராமசாமி இயக்கி உள்ளார். விஜய்சேதுபதி, விஷ்ணு, நந்திதா, ஐஸ்வர்யா நடித்துள்ளனர். வைரமுத்துவின் பாடல்களுக்கு யுவன் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் வருகிற 18ந் தேதி பிரமாண்ட விழா நடத்தி வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். அதற்குள் பாடல்கள் இணையதளத்தில் வெளியாகிவிட்டது. எல்லா இணைய பக்கங்களிலும் இலவசமாக டவுண்ட்லோட் செய்கிற அளவிற்கு கிடைக்கிறது. இதனால் தயாரிப்பாளர் லிங்குசாமியும், இயக்குனர் சீனு ராமசாமியும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து இயக்குனர் சீனு ராமசாமி கூறியதாவது, முதன்முறையாக இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவும் கவிஞர் வைரமுத்துவும் இணையும் படம் இது என்பதால், இருவரின் ரசிகர்கள் மத்தியில் படத்தின் பாடல்கள் குறித்த பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. பாடல்கள் அனைத்தும் மிகச்சிறப்பாக வந்துள்ளன. அதனை டிசம்பர் 18 ஆம் தேதி, அனைவர் முன்னிலையிலும் வெளியிடலாம் என்ற திட்டத்தில் அதற்கான வேலைகளில் நாங்கள் ஈடுபட்டு வந்தோம்.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு படத்தின் பாடல்கள் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம். வேறு எந்த தொழிலிலும் திரைத்துறையில் இருக்குமளவிற்கு பாதுகாப்பற்ற தன்மை இருக்குமா என்று தெரியவில்லை. மொத்தத் துறையும் பாதுகாப்பற்ற சூழலிலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது. யார் மூலம், எப்படி இந்த பாடல்கள் இணையத்தில் வெளியாகின என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் மிகுந்த சிரத்தையெடுத்து உருவாக்கப்பட்ட ஒரு படைப்பு இப்படி திருட்டுத்தனமாக மக்களை சென்றடைந்தது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தையும் மனஉளைச்சலையும் தருகிறது.
'உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது' என்பார்கள். ஆனால் இங்கே எங்களுக்கு நிலம் கூட மிஞ்சாத நிலை உள்ளது. இதனை தடுப்பதற்கான வலிமையான முறைகளை விரைந்து உருவாக்க வேண்டிய தேவையும் அவசரமும் உள்ளது. ஆனால் அனைவரும் இந்த நிலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கவலையளிக்கிறது' என்கிறார் சீனு ராமசாமி.