இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கடநத 10 வருடங்களாக இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த ஈஸ்டர்ன் ஐ என்ற இணையதளம் ஆசியாவின் 50 செக்ஸியான ஆண்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்த 2014ம் ஆண்டிற்கான செக்ஸியான 50 ஆண்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இதற்கு முன்பு 2 ஆண்டுகள் முதலிடத்தை பிடித்த இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனே இந்த ஆண்டும் முதலிடத்தை பிடித்திருக்கிறார். ஆக, 3வது முறையாக அவர் ஆசியாவின் முதல் செக்ஸியான ஆண்மகனாக செலக்ட் ஆகியிருக்கிறார்.
மேலும், பாலிவுட் நடிகர்கள் ஷாகித் கபூருக்கு 5வது இடமும், பரூன்சோப்திக்கு 6வது, ரன்பீர் கபூருக்கு 8வது, சல்மான்கானுக்கு 10வது, ஷாரூக்கானுக்கு 13வது இடங்களும் கிடைத்திருக்கிறது. ஆனால், கடந்த ஆண்டுவரை தென்னிந்திய சினிமாவில் யாருமே தேர்வாகாத நிலையில், இந்த ஆண்டு தென்னிந்திய சினிமாவில் இருந்து சூர்யா மட்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
ஆனால், அவருக்கு கிடைத்திருப்பதோ 50வது இடம். அதாவது கடைசி இடம். இருபபினும், தென்னிநதிய சினிமா நடிகர்களில் சூர்யா ஒருத்தராவது செலக்ட் ஆனாரே என்று இங்குள்ள சினிமாக்காரர்கள் ஆறுதலடைந்திருப்பதோடு, அவருக்கு வாழ்த்தும் கூறி வருகிறார்கள்.