வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 7வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 4ம் தேதி தொடங்கி 11ந் தேதி வரை நடந்தது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 17 படங்கள் திரையிடப்பட்டது.
இதில் போட்டி பிரிவில் பங்கேற்ற இந்திய படங்களில் தமிழ் நாட்டில் இருந்து குற்றம் கடிதல், பண்ணையாரும் பத்மினியும் படங்கள் இடம் பெற்றிருந்தது. இதில் சிறந்த இந்திய படமாக பண்ணையாரும் பத்மினியும் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்காக இயக்குனர் யூ.அருண்குமாருக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசும், பதக்கமும் வழங்கப்பட்டது. பெங்களூருவில் நடந்த நிறைவு விழாவில் கர்நாடக கவர்னர் வாஜ்பாய் வாலா வழங்கினார்.
சிறந்த கன்னட படத்திற்காக விருது பிரக்குருதிக்கும், சிறந்த ஆசிய படத்துக்கான விருது ஆகாசி பார்லருக்கும், சிறந்த உலக படத்துக்கான விருது ஹஜ் படத்துக்கும் வழங்கப்பட்டது. இந்திய படத்துக்கான விருதில் பண்ணையாரும் பத்மினியும் படத்துடன் அன் டூ டஸ்க் என்ற மலையாளப் படத்திற்கும், எல்லோ என்ற மராத்தி படத்திற்கும் வழங்கப்பட்டது. பெங்களூருவில் விருது பெற்ற பண்ணையாரும் பத்மினியும் சென்னை சர்வதேச திரைப்பட விழா போட்டி பிரிவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் பண்ணையாரின் மனைவியாக நடித்த துளசி கன்னட நடிகை என்பதும் குறிப்பிடத்தக்கது.