ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்குத் திரையுலகில் தமிழ் மொழியிலிருந்து மொழி மாற்றம் செய்யப்படும் படங்கள், அங்கு நேரடித் தெலுங்குப் படங்களுக்கு இணையாக வெளியாவதால் தெலுங்குத் திரையுலகினர் தமிழ்ப் படங்களின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அப்படி டப்பிங் ஆகி வரும் படங்களை அங்குள்ள மீடியாக்களும் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்திருக்கின்றன. நேற்று வெளிவந்த 'லிங்கா' தெலுங்கப் படத்தை பல ஆந்திர மீடியாக்கள் படத்தைத் ஒரு தோல்விப் படம் என்றே குறிப்பிட்டு எழுதி வருகிறார்களாம். படத்தில் புதிதாக எதுவுமில்லை, அரைத்த மாவையே அரைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அதோடு தெலுங்குத் திரையுலகம் அனுஷ்காவின் அழகையும், திறமையையும் மதித்து 'பாகுபலி, ருத்ரமாதேவி' போன்ற படங்களைக் கொடுக்க, தமிழ்த் திரையுலகமோ அனுஷ்காவிற்கு 'இரண்டாம் உலகம், லிங்கா' போன்ற படங்களையே கொடுக்கிறது என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார்கள். இனி, அனுஷ்கா தமிழ்ப் படத்தில் நடிக்க யோசிக்க வேண்டும் என்று ஆலோசனை வேறு சொல்லியிருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்னர்தான் 'லிங்கா' படத்தின் பிரமோஷன் ஹைதராபாத்தில் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி மற்றும் பலர் கலந்து கொள்ள நடைபெற்றது. இத்தனைக்கும் படத்தில் தெலுங்கின் மூத்த இயக்குனராக கே.விஸ்வநாத், நடிகர் ஜெகபதி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இத்தனைக்கும் 'லிங்கா' படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் நடக்கவேயில்லை, ஹைதராபாத்தில்தான் அதிக நாட்கள் நடைபெற்றது. அங்குதான் படத்திற்கு பிரம்மாண்டமான செட்டுகளை உருவாக்கியிருந்தார்கள். அடுத்து கர்நாடகாவில் நடைபெற்றது. நியாயமாகப் பார்த்தால் தமிழ் ரசிகர்கள்தான் கோபப்பட வேண்டும்.
இருந்தாலும், தமிழிலிருந்து டப்பிங் ஆகும் படங்களை அவர்கள் வரவேற்கத் தயாராக இல்லை என்றே இதன் மூலம் எண்ணத் தோன்றுவதாக சில மீடியேட்டர்கள் நம்மிடம் தெரிவித்தனர். இது, விரைவில் வெளியாகவிருக்கும், “ஐ, என்னை அறிந்தால்” படங்களில் எதிரொலித்தாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள். தெலுங்கிலிருந்து தமிழில் அந்த அளவிற்கு மொழி மாற்றப் படங்கள் வருவதில்லை என்பதே அதற்குக் காரணம் என்கிறார்கள்.