தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இலங்கையில் நடந்த இறுதிப்போரில் விடுதலைபுலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை மையமாக வைத்து பிரவீன் காந்தி, ''புலிப்பார்வை'' என்ற படத்தை இயக்கினார். இதில் சத்யதேவ் என்ற சிறுவன் பாலச்சந்திரனாக நடித்திருந்தார். வேந்தர் மூவீஸ் சார்பில் மதன் தயாரித்து பிரபாகரனாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலையை மையமாக வைத்து வீரத்தின் மகன் என்ற பெயரில் மற்றுமொரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. பிஜு ரவீந்திரன் என்பவர் இயக்குகிறார். மாஸ்டர் அத்வைது என்ற சிறுவன் பாலச்சந்திரனாக நடிக்கிறான். விஷ்ணு, ராதிகா, இந்து நடிக்கிறார்கள். படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் உள்ளது. ஜனவரி மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.