விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
உலகம் முழுக்க எத்தனையோ திரைப்பட நடிகர்கள் இருந்தாலும், ரஜினிகாந்த்தைப்போல் உலகம் முழுவதும் உள்ள மக்களை வசீகரித்த நடிகர் வேறு யாரும் உண்டா என்பது சந்தேகம்தான். சாதி மதம் இனம் மொழி தேசம் கடந்து அனைவரது உள்ளங்களிலும் வாழ்ந்து வருகிறார் ரஜினி. அவரை கடவுளுக்கு நிகராகவும், தலைவா என்றும் வணங்கப்பட்டு வருகின்றனர் மக்கள். அவரது திரைப்படங்கள் தென்னிந்திய சினிமா சந்தையில் மட்டும் அல்ல, இதுவரை ஜப்பான் மற்றும் பல நாடுகளிலும் வசூலில் சாதனை படைத்து வெற்றி பெற்றுள்ளன. திரைப்பட நடிகராக ரஜினி பற்றிய தகவல்கள் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு அதிகம்.
ரஜினியைப் பற்றி தெரியாத விஷயங்கள் பல உண்டு. அவற்றை இங்கே தொகுத்து தந்திருக்கிறோம்.
ரஜினி அளவுக்கு வேறு ஒருவருக்கு புகழ் கிடைத்திருந்தால் எப்படி இருந்திருப்பார்கள் என்று சொல்லத்தேவையில்லை. ரஜினியோ, தன்னுடைய திரையுலக வாழ்கைக்கு பின்னால் மிகவும் எளிமையான மனிதர். அவருடைய எளிமையும் தன்னடக்கமும்தான் அவரது புகழுடன் சேர்ந்த வாழ்க்கைமுறையை சமப்படுத்தி வைத்திருக்கிறது.
ரஜினிகாந்த் மக்கள் மனதை தொட்டவர் மட்டும் அல்ல இமயமலையின் சிகரத்தையும் தொட்டவர். அது தான் அவரது அமைதி மற்றும் தியானதிற்கான ஆன்மீக புகழிடம் மற்றும் மறைவிடம். புனித குகைகளை ஆராய்ந்துள்ள ஒரே நடிகர் அவர்தான். ஒவ்வொரு படத்தில் நடித்து முடித்த பிறகும் தனியாக இமாலயம் சென்று வருவார். இமாலய கிராமங்களில், உட்புறம் சென்று இருப்பதே தியானம் செய்வதற்கு இணை என்பது ரஜினியின் கருத்து.
அவரது படங்களில் சில எதிர்ப்பார்த்த அளவுக்கு ஓடாமல்போகும்போது, அவர் தனது சொந்த பணத்தில் இருந்து தனது விநியோகஸ்தர்களுக்கு பணத்தைத் திருப்பிக்கொடுத்திருக்கிறார். இது அவருடைய தன்னலமற்ற தன்மையை காட்டுகிறது. தன் படங்களின் வசூல் சிறப்பாக இல்லை என்கிறபோது, மனப்பூர்வமாக தோல்விப் பழியைதானே ஏற்றுக்கொண்டு மற்றவர்களின் நஷ்டத்தையும் ஏற்றுக்கொள்வார்.
ரஜினி எப்போதும் யாரையும் காத்திருக்க வைக்க மாட்டார். மற்றும் குறித்த நேரத்திற்கு முன்பு அவரது ஷூட்டிங் மற்றும் நிகழ்வுகளுக்கு சென்றடைவார். அவர் புகழின் உச்சிக்கு சென்ற பிறகும் அவரை சுற்றி நட்சத்திரங்களுடன் இணைந்து இருப்பதில்லை.
தனியாக காரை ஓட்டிச் செல்ல விரும்புவர் ரஜினி. பெரும்பாலான நட்சத்திரங்களைப்போலல்லாமல், அவர் ஷூட்டிங் மற்றும் வெளி நிகழ்வுகளுக்கு செல்லும்போது குழுவாக கலந்து கொள்ளாமல் தனித்திருப்பதையே விரும்புவார்.
இன்னும் தனது பழைய உடைகள், படங்கள், தனது பழைய கார் போன்ற தனது உடைமைகளை பொக்கிஷமாக பாதுகாக்கிறார் ரஜினி.
அவர் உலகத்தில் எதையும் வாங்கும் அளவிற்கு போதுமான பணக்காரர் என்றாலும், அவரது அடக்கம், பொருளின் மதிப்பபை அரிந்து விஷயங்களை புரிந்து கொள்ள உதவுகிறது.
ரஜினிகாந்த் இன்றும் தனது ஆலோசகராக, இயக்குநர் கே.பாலாசந்தர் அவர்களை மதித்து வருகிறார். அவரது முதல் முன்னேற்றத்தை கொடுத்தவர் கே.பி.
ஒரு மெகாஸ்டார் ஆனாலும் தனது ஆரம்பகாலத்தை இன்றும் மறந்ததில்லை. தனது ஆசான் கே.கி. இன்றுகூட தன்னை திட்டவும் அவரை கேள்வி கேட்கவும் அனுமதிக்கிறார்.
பெரும்பாலான ரசிகர்களுக்கு ரஜினி எவ்வளவு படித்திருக்கிறார் என்று தெரியாது. அவர் அதிகமாக புத்தகங்களை படிப்பார். அவரது ஆர்வம் மிகுந்த பகுதிகளில் அறிவியல், ஆன்மீகம், அரசியல், கலாச்சாரம் மற்றும் பல.
நமக்கு ரஜினிகாந்த் படங்களில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் தெரியும். ஆனால் அவரது உண்மையான வாழ்க்கை வேடங்கள் இன்னும் அழமாக இருக்கும்.
தனது இளம் வயதில் தாயை இழந்தார். தனது குடும்பத்திற்கு பல வழிகளில் கஷ்டப்பட்டு உதவியவர். கூலி தொழிலாளி ஆகவும் பேருந்து கண்டக்டராகவும் உழைத்தவர். அவரது கடுமையான உழைப்பு பிற்கால வாழ்விற்கு வெற்றியை தேடி தந்தது. ரஜினிகாந்த் எளிமையான வாழ்கைக்கு ஒரு பிரகாசமான எடுத்துகாட்டு.
அவர் பெரும்பாலான நேரம் வேட்டி குர்தா அணிந்து கொள்ள விரும்புவார், மற்றும் தூங்கும் போது ஒரு ஈரமான துணியால் தனது முகத்தை மூடிக்கொள்வார்.
தன்னைச் சுற்றி உள்ளவர்களை எப்படி மென்மையான மனதுடன் கவனித்து கொள்கிறார் என்பதுதான் அவருடைய தனித்துவம். தன்னைச் சுற்றி உள்ள அனைவரையும் எப்படி சமமாக நடத்துகிறார். அவர் ஷூட்டிங் பொழுது அனைவரையும் மதிப்புடன் பார்த்துகொள்வார். அவர் எந்த காரணத்துக்காகவும் எவரையும் வேற்றுமைப்படுத்த மாட்டார். இந்த விஷயங்களை எல்லாம் கவனத்தில் எடுத்துக்கொண்டால் ரஜினியைப் பற்றி பாராட்டுவதுஎந்தளவுக்கு உண்மையானது என்பது விளங்கம்.
இருபது வருடங்களுக்கு முன்பு, தன்னுடைய பிறந்தநாள் விழா சென்னையில் கொண்டாட்டம் முடித்துவிட்டு திரும்பியபோது அவரது மூன்று ரசிகர்கள், இறந்துவிட்டனர். அப்பொழுது மிகவும் வருத்தப்பட்ட ரஜினி அதற்கு பின்னர் பிறந்தநாள் கொண்டாட்டங்களை சென்னையில் கொண்டாடுவதில்லை.
ரஜினியை அவரது ரசிகர்கள் எவ்வளவு மதிகிரார்களோ அந்த அளவிற்கு அவரும் ரசிகர்களை மதிக்கிறார்.