பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாசமலர், முள்ளும் மலரும், கிழக்கு சீமையிலே மாதிரியான படங்கள் அண்ணன், தங்கை பாசத்தை உசத்தி சொன்ன படங்கள். பெரும்பாலான படங்கள் அப்படித்தான் இருக்கும். இப்போது காத்தாடி மனசு என்ற ஒரு படம் வர இருக்கிறது. இதில் அண்ணனும், தங்கையும் பகையாளிகளாக இருக்கிற கதை.
அண்ணன் தம்பி ராமையா, தங்கை கோலிசோடா சுஜாதா. இருவருடைய பிள்ளைகளும் காதலிக்கிறார்கள். இதனால் பகை இன்னும் வளர்ந்து வெட்டு குத்து லெவலுக்கு போய் காதலர்களை பிரித்து வைக்கிறார்கள். சொந்த பகைக்காகவும், கவுரவத்துக்காகவும், ஈகோவுக்காவும் பிரிக்கப்பட்ட காதலர்கள் என்ன கஷ்டங்களையெல்லாம் அனுபவிக்கிறதுங்றதுதான் படத்தோட கதை.
மறவாதே கண்மணியே, கீழத்தெரு கிச்சா படங்களை இயக்கிய என்.எஸ்.மாதவன் இயக்கி உள்ளார். மவுரியா, விஜய் லோகேஷ், யுகா, கஞ்சா கருப்பு நடித்துள்ளனர். ஸ்ரீசாஸ்தா இசை அமைத்துள்ளார். முற்றிலும் புதுக்கோட்டை பகுதி கிராமத்து பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள படம்.