ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
சின்னத்திரையில் திருமுருகன் இயக்கிய மெட்டி ஒலி தொடர் நேயர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. ஆனால் அதையடுத்து தொடர் இயக்குவதை தவிர்த்து விட்டு சினிமாவுக்கு வந்தார் திருமுருகன். டி.வியில் பரபரப்பை ஏற்படுததிய இயக்குனர் என்பதால் சினிமாவிலும் அவர் சாதிப்பார் என்றுதான் கருதப்பட்டது.
ஆனால், பரத் நடிப்பில் அவர் இயக்கிய எம்டன் மகன் ஓரளவு வெற்றி பெற்றபோதும், அதற்கடுத்து இயக்கிய முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படம் தோல்வியடைந்து விட்டது.அதனால் சினிமாவில் மீண்டும் ரிஸ்க் எடுக்க விரும்பாத திருமுருகன், அதையடுத்து, தேனிலவு என்ற தொடரை இயக்கிவர், தற்போது நாதஸ்வரம் தொடரை இயக்கி, அதில் வழக்கம்போல் ஒரு முக்கிய ரோலிலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த தொடர் விரைவில் முற்று பெறவிருக்கிறதாம். அதனால் தற்போது தனது அடுத்த தொடருக்கான வேலைகளில் இறங்கி விட்டார் திருமுருகன். அந்த தொடரில் இதுவரை தனது தொடர்களில் நடித்ததை விடவும் இன்னும் திறமையான நடிகர் நடிகைகளுக்கு முதலிடம கொடுக்கப்போகிறாராம். அதனால், அதுபற்றிய அறிவிப்பினை வெளியிடாமல், நடிகர் நடிகை தேர்வினை ரகசியமாக நடத்தி வருகிறார்.