டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அரண்மனை, பூஜை படங்களுக்கு பிறகு ஆண்ட்ரியாவின் கைவசம் 8 படங்கள் உள்ளன. இதில், ஆம்பள, இது நம்ம ஆளு படங்களில் சிறிய வேடங்களில் நடித்தபோதும், மற்ற படங்களில் எல்லாம் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்கள்தான். அதில் விஸ்வரூபம்-2, உத்தம வில்லன், புதிய திருப்பங்கள், தரமணி, வலியவன் ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை.
அதனால் இந்த படங்கள் திரைக்கு வரும்போது தனது பெயரும் பரவலாக பேசப்படும் என்று நினைக்கும் ஆண்ட்ரியா, சமீபகாலமாக படபபிடிப்பு தளங்களில் வேலையில் கணணும் கருத்துமாக இருக்கிறாராம். அதாவது, குறித்த நேரத்தில் ஸ்பாட்டுக்கு வந்து விடுவது. வெட்டி அரட்டையடிக்காமல் இருப்பது, டைரக்டர் எதிர்பார்த்தபடி ஓரிரு டேக்கிலேயே ஓகே செய்வது என தொழிலில் அதிக ஈடுபாடு காட்டுகிறாராம்.
மேலும், ஸ்பாட்டில் யாரிடமும் அதிகம் பேசாத ஆண்ட்ரியா, மற்றவர்கள் தன்னை மதித்து வந்து பேசினால், அவர்களிடம் மட்டும் சகஜமாக பேசிப்பழகுகிறாராம். முன்பு மாதிரி நடிகர்களை தேடிச்சென்று பழகுவது, கடலை போடுவது என்பதையெல்லாம் சுத்தமாக ஏறக்கட்டி விட்டாராம். ஆண்ட்ரியாவின் இந்த மாற்றம் டைரக்டர்களுக்கு அவர் மீது நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தி வருவதாக அவருடன் நடிப்பவர்கள் சொல்கிறார்கள்.