இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
ரஜினிகாந்த் நடிக்கும் படம் வெளியாகிறதென்றால் அந்தக்காலத்தில் அதாவது, 80 மற்றும் 90களில் சென்னையைப் பொறுத்தவரையில் ஆல்பட், அபிராமி, உதயம், ஸ்ரீபிருந்தா, பாரத் என ஐந்து திரையரங்குகளில் கண்டிப்பாக வெளிவரும். அதிலும் ஆல்பட் தியேட்டரில் படம்பார்ப்பதை ரஜினி ரசிகர்கள் மிகவும் விரும்புவார்கள். ரஜினிகாந்தின் எத்தனையோ திரைப்படங்கள் மேற்கண்ட தியேட்டர்களில் வெளியிடப்பட்டு வெள்ளிவிழா கொண்டாடியிருக்கின்றன. அந்தக்காலத்தில் குறைந்த திரையரங்குகள், அதிக நாட்கள் என்று இருந்த்து. அந்தநிலை தற்போது மாறி அதிக திரையரங்குகள் குறைந்த நாட்கள் என்றாகிவிட்டது. ஒருசில நாட்களுக்குள்ளேயே கோடிக்கணக்கான வசூலை அள்ளும் வியாபார முறைக்கு தமிழ்த் திரையுலகம் மாறிவிட்டது.
ரஜினிகாந்த் நடித்து 2007ல் வெளிவந்த 'சிவாஜி' திரைப்படம் சென்னையில் மட்டும் 16 திரையரங்குகளில் வெளியானது. ஒரு ரஜினி படம் மட்டுமல்லாமல் ஒருதமிழ்ப்படம் 10க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது அதுதான் முதல்முறை. அதன்பின் 2010ல் வெளிவந்த 'எந்திரன்' திரைப்படம் திரையரங்க வரலாற்றிலேயே மகத்தான சாதனை ஒன்றை படைத்தது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. சிட்டியில் மட்டும் 40க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அப்படம் வெளியானது.
தற்போது 'லிங்கா' திரைப்படம் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் 60க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. சிட்டியில் மட்டும் 50 திரையரங்குகள் வரை வெளியாகிறது. இவற்றில் பத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகள் கொண்ட புறநகர்ப் பகுதிகளான மாயாஜால் மற்றும் வேளச்சேரி லக்ஸ் திரையரங்குகளில் அனைத்து திரையரங்குகளிலும் 'லிங்கா' வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'லிங்கா' திரைப்படம் இன்றைய காலக்கட்டத்தில் தமிழ்த்திரைப்பட வியாபாரத்திற்கு ஒருமுன் மாதிரியாக விளங்கும் என்பது மட்டும் உறுதி.